Monday, May 31, 2010

ரத்த வெறி இன்னும் அடங்கலையா?

ரத்த வெறி இன்னும் அடங்கலையா?


ஏற்கனவே ஏராளமான மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்களை கொன்று
குவித்த மாவோயிஸ்டுகள் தற்போது அப்பாவி மக்களை அராஜகமாக
கொன்று வருகின்றனர். சத்தீஸ்கர் பேருந்து கொலைக்குப் பின்பு இப்போது
ரயில் தகர்ப்பு. சாமானிய உழைப்பாளி மக்கள்தான் இவர்களின் வர்க்க
எதிரிகளா? அழித்தொழிப்பு யாருக்காக? ரத்த வெறி பிடித்த பாசிச மம்தாவிடம் மேற்கு வங்கத்தை ஒப்படைக்கவா? இந்தியாவிற்கு மிகப்
பெரிய சவால் மாவோயிஸ்டுகள் என்று சொல்லும் மன்மோகன் சிங்
மம்தாவை இன்னமும் அமைச்சரவையில் வைத்திருப்பது எதற்க்காக?
அவரும் ரத்த தாகத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறாரா? கொள்கையற்ற 
 இக்கூட்டத்தை   மாவோயிஸ்டுகள் என்று சொல்வது  மாவோவிற்கு  இழுக்கு. இக்கூட்டத்தின் வருடாந்திர வருமானம் 2000 கோடி ரூபாயாம்.
ஆள் கடத்தல், மிரட்டல் வேலைகள், கஞ்சா அபின் வளர்த்தல் மூலம்
பணம் சேர்க்கும் இவர்கள் அப்பாவி ஏழை விவசாயிகளையும் விட்டு வைப்பதில்லை. மாபியா கூட்டம் என்றழைப்பதே சரியாக இருக்கும்.
மார்க்சிஸ்டுகளை வீழத்த வேண்டும் என இவர்களை வளர்ப்பது
பாம்பிற்கு பால் வார்க்கும் கதைதான்.

No comments:

Post a Comment