Sunday, May 16, 2010

கிரிக்கெட்டை கொஞ்சம் தடை செய்வோமே!

ஊழலில் மூழ்கிப்போன கிரிக்கெட் விளையாட்டை கொஞ்ச நாளாவது தடை செய்வது என்பது இந்திய விளையாட்டு உலகிற்கு நல்லது. உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த்துள்ள ஆனந்த், தடுமாறிக் கொண்டிருந்த ஹாக்கி அணி மலேசியாவில் பெற்ற வெற்றிகள் எல்லாமே யாருக்கும் கவனத்தில் இல்லை. தோற்றுப் போன கிரிக்கெட் அணிக்காக இன்னும் எத்தனை நாள் இழவு வீடாக இந்தியா இருக்கப்போகிறது? கொடிகள் சம்பாதிப்பதும் கும்மாளம் அடிப்பாதுமே தொழிலாகக் கொண்ட இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதில் தேச பக்தி இல்லை. அன்னியப் பல்கலைக் கழகங்களின் படையெடுப்பு, விலைவாசி உயர்வு, மாவோயிஸ்டுகளின் அட்டகாசம், அதற்கு ஆதரவாய் மம்தா என கவலைப்பட, போராட ஏராளமாய் பிரச்சினைகள் உள்ளது.
கிரிக்கெட் இழவை தூக்கிஎறிந்து விட்டு இவற்றை கவனிப்போமே.

1 comment:

  1. Yes You are perfectly correct. Cricket must
    be banned atleast for Timebeing

    ReplyDelete