Thursday, June 24, 2010

ஒபாமாவிற்கு தெரியுது, மன்மோகனுக்கு தெரியல

பன்னாட்டுக் கம்பெனிகளின் தலைமை பீடமாக உள்ள
 அமெரிக்காவில்   ஒபாமா அங்கே உள்ள இன்சூரன்ஸ்
 கம்பெனிகளை எல்லாம் மருத்துவக்  காப்பீட்டு
பிரிமியத்தை உயர்த்தினால் நடப்பதே வேறு என்று
 மிரட்டுகிறார்.  சொந்த நாட்டு கம்பெனிகளாக இருந்தாலும்
மக்களை கொள்ளையடிப்பதில் ஒரு அளவு வேண்டும்
 என அவர் விரும்புகிறார் போலும். தன் நாட்டு
கம்பெனிகளின் யோக்கியதையும் அவருக்கு
 தெரிந்துள்ளது. அதனால்தான் அவ்வப்போது
 எச்சரிக்கை கொடுக்கிறார்.

ஆனால் இவர்கள் எல்லாம் இந்தியாவில் அதிகமாக
 ஊடுருவி இந்திய மக்களை கொள்ளையடிக்க அதிகம்
 ஆசைப்படுவது நம்ம நாட்டு பொருளாதார மேதை
 மன்மோகன்சிங். எல்லாம் தெரிஞ்ச நம்ம பிரதமர்
பன்னாட்டுக் கம்பெனிகளின் தில்லுமுல்லு பத்தி
 எப்போதான் தெரிஞ்சுக்கப் போறார்?

No comments:

Post a Comment