Tuesday, July 6, 2010

ஏன் இந்த வெறி? யாரை திருப்திப் படுத்த இந்த அராஜகம்?





அனேகமாக எல்லா மாநிலங்களிலும் நேற்று கதவடைப்புப் போராட்டம்
மக்களிடத்தில் தாக்கத்தை உருவாக்கும் அளவில்தான் நடைபெற்றது.
மிரட்டல்கள் மூலமாக சில இடங்களில் ஆளும் கட்சிகள் கடைகளை
திறக்க வைத்திருக்கலாம், அரசு வாகனங்களை ஓட வைத்திருக்கலாம்.
ஆனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு சரியில்லை என்ற
உணர்வு மக்களுக்கு ஏற்பட்டு விட்டது என்கிற வரையில் எதிர்க்கட்சிகளுக்கு
வெற்றியே.

நியாயமான கோரிக்கைக்காக நடைபெறுகின்ற ஒரு போராட்டம், அக்கோரிக்கை
வெற்றி பெற்றால் நுகர்வோராக உள்ள காவல்துறையைச சேர்ந்தவர்களுக்கும்
நல்லதுதான். ஆனால் எப்படி வெறியோடு போராடுபவர்களை தாக்குகிறார்கள்
பாருங்கள், இந்த வேகம் சமூக விரோதிகளை கைது செய்வதிலோ அல்லது
கொலை, கொள்ளைக்காரர்களை பிடிப்பதிலோ தென்படுவதே இல்லையே!

ஆளும் கட்சியின் தொ(கு)ண்டர் படையாக செயல்படுவது என்று மாறும்?

No comments:

Post a Comment