Friday, August 20, 2010

கைதியாய் என் தாய்

அந்தணர் மந்திரம் உரக்க ஒலிக்க,
அட்சதை தூவ கைகள் எழுந்திட,
ஆர்வ மிகுதியில் அனைவருமே
மேடையை நோக்க,
மங்கள நாணை மணமகன் எடுக்க,
சட்டென்று இருள் சூழ
சின்னத்திரையும் கூட
காணாமல் போனது,
" அடப்பாவம், சகுனத்தடை
என்ன ஆகுமோ அவர்கள் எதிர்காலம்"
வேதனையில் தவித்தார்,
தொடரின் பிடியில் 
கைதியாய் என் தாய்

No comments:

Post a Comment