Wednesday, March 2, 2011

சிகரெட் விலையை உயர்த்தாத அண்ணன் பிரணாப் முகர்ஜிக்கு நன்றி


 மத்திய பட்ஜெட் தொடர்பாக நேற்று  முன்தினம் நான் எழுதிய பதிவான 'புதை குழிக்கு போவோமா' வை பார்த்து விட்டு ஒரு தோழர் இன்று ஒரு 
கேள்வி கேட்டார். " எல்லாம் சரிதான், தனிப்பட்ட முறையில் உங்களுக்கு
ஆதாயம் செய்துள்ள பிரணாப் முகர்ஜியை நீங்கள் பாராட்ட  வேண்டாமா" என்று கேட்டார். புரியாமல் பார்த்தேன். சிகரெட் விலையை அவர் உயர்த்தாமல் விட்டு விட்டார். உங்களின் மாதாந்திர செலவினம்  அதிகரிக்காமல் பார்த்துக் கொண்ட அவருக்கு நீங்கள் நன்றி  சொல்ல வேண்டாமா  என அவர் கூறினார். 


நியாயம்தான். ஆகவே சிகரெட் விலையை உயர்த்தாமல் புகை 
பிடிப்பவர்கள், சிகரெட் கம்பெனிகள் வாழ்வில் ஒளியேற்றிய 
அண்ணன் பிரணாப் முகர்ஜிக்கு நன்றி , நன்றி, நெஞ்சார்ந்த நன்றி

பின்குறிப்பு 1 :  பட்ஜெட்டிற்கு ஒரு மாதம் முன்பே ஐ.டி.சி  கம்பெனி 
கோல்ட்ஃ பிளேக் ஒரு பாக்கெட் விலையை ரூபாய் முப்பத்தி 
ஐந்திலிருந்து  முப்பத்தி ஒன்பதாக  உயர்த்தி விட்டது. வேலூரில் 
பெரும்பாலான கடைகளில் நாற்பது ரூபாய்க்குத்தான் விற்கிறார்கள்.

பின்குறிப்பு 2 : தோழர் பட்டாபி, இப்ப திருப்தியா?

4 comments:

  1. தங்களுடன் சேர்ந்து நானும் பிராண்புக்கு என் நன்றியை சொல்லிக்கிறேன்..

    ReplyDelete
  2. அனானி அண்ணே, இந்த பதிவு தேவையா என்றுதான் நானும் நினைத்தேன்.
    ஒவ்வொரு பதிவு எழுதியதும் என் மனைவியையும் மகனையும் படிக்கச்சொல்வேன். இம்முறை அது கூட செய்யல. விடுங்க அது வேற கத,
    விஷயத்திற்கு வருகிறேன். வரி உயரவில்லை, அதனால் உங்களுக்கு
    செலவு அதிகமாகவில்லை என்பது தோழரது கருத்து. ஆனால் எவ்வித
    காரணமும் இல்லாமலேயே விலை மட்டும் உயர்ந்து விட்டது. வரி
    உயர்ந்திருந்தால் நாட்டிற்காவது பணம் கிடைத்திருக்கும். இப்போது
    பணம் போனது என்னமோ சிகரெட் தயாரிக்கும் கம்பெனிக்கு மட்டும்தான்.

    எல்லாம் தெரிந்திருந்தும் இந்த இழவ விட முடியவில்லை பாருங்க, அது
    ஒரு கொடுமை. என்ன ஹரிஹரன் சார், சரிதானே?

    ReplyDelete
  3. நம் அரசு நல்லது தானே செய்கிறது, சோற்றின் விலையைக் குறைக்காது, சிகரெட் விலையை உயர்த்தாது விட்டதன் காரணம். பசி வந்தால் நீ மட்டும் சாவாய், ஆனால் புகைப்பிடித்தால் உன்னோடு நாலு பேர் சாவான். ஆகவே 10-ல் ஐந்தாவது சாகும். 2020-ல் நம் நாட்டு மக்கள் தொகை குறைந்து நான்கில் ஒன்றாவது குறையும் அல்லவா??????? என்ன சார் புரிஞ்சுக்கோங்க.....

    ReplyDelete