Monday, April 4, 2011

மறைந்து போகும் பெண் குழந்தைகள்

2011 ம் ஆண்டிற்கான மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்ட 
புள்ளி விபரங்கள்  வெளி வந்துள்ளன.  பல்வேறு விபரங்கள் அந்த 
அறிக்கையில்  தரப்பட்டுள்ளது. மக்கட்தொகை  121 கோடியாக  
உயர்ந்துள்ளது  என்பதும்  ஆண், பெண் சதிவிகிதத்தில்  உள்ள 
இடைவெளி குறைந்துள்ளது, மக்கட்தொகை  அதிகரிப்பு விகிதம் 
குறைந்துள்ளது  ஆகியவை  முக்கியமான தகவல்கள். 
ஆயிரம் ஆண்களுக்கு  932  பெண்கள் என்ற கடந்த மக்கட்தொகை 
கணக்கெடுப்பு நிலவரம்  இம்முறை  940  என முன்னேறியுள்ளது  
மகிழ்ச்சி அளித்தாலும், அந்த மகிழ்ச்சி  அடுத்த விபரத்தை  பார்க்கும்
போதே  மறைந்து விட்டது.  
ஆறு வயது வரை  உள்ள ஆண்  குழந்தைகள்    ஆயிரம்  என்றால் அதே வயதுக்கு  உட்பட்ட  பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 914  தான். 
கடந்த மக்கட்தொகை கணக்கெடுப்பில்  927  என்றிருந்த இந்த சதவிகிதம் 
இப்போது  914  என சரிந்துள்ளது  மிகவும் கவலைக்குரியது.  
பெண் குழந்தைகள்  பிறப்பது  கருவிலேயே  தடுக்கப்படுகின்றது அல்லது
பிறந்த பின் கொல்லபபடுகிறது  என்பதைத்தான் இந்த புள்ளி விபரம் 
உணர்த்துகின்றது. சட்டங்களோ, பிரச்சாரங்களோ இன்னும் வெற்றி பெறவில்லை. நிலைமை முன்னை விட மோசமாகி உள்ளது. 

இது சமூக அமைப்பிற்கு கேடு உருவாக்கும்  செயல்.  இந்த நிலைமை 
தொடர்வது நல்லதல்ல.  இதை மாற்ற என்ன செய்யப் போகிறோம்? 
ஆனால் ஏதாவது செய்ய வேண்டும்.  வரதட்சணையையும்  ஆடம்பரத்
திருமணங்களையும்  ஒழித்தால் மட்டுமே  பெண்களை சுமையாய் 
பார்க்கும் பார்வை மாறும். 

அதை நோக்கி நாம் அனைவருமே முன்னேற வேண்டும். 




உட்பட்ட 

No comments:

Post a Comment