Saturday, May 28, 2011

அழகை பாதுகாக்க அற்புத ஆலோசனைகள்



 பரபரப்பாக  சூப்பர் ஷாப்பிங் மாலுக்குள்  நுழைந்து கொண்டிருந்தேன். அப்போது  நாற்பது வயதுப் பெண்மணி ஒருத்தி  வழி மறித்து  மேடம்
சாப்பிட்டு இரண்டு நாளாச்சு, ஒரு அம்பது ரூபா கொடுத்தா  வயிறு 
ரொம்ப சாப்பிடுவேன்  என்றாள்.


அவளை கொஞ்சம் மேலும் கீழுமாய் பார்த்தேன். கிட்டத்தட்ட  அவளுக்கும்
என் வயசுதான்  இருக்கும், ஆனாலும் வறுமையில் வாடிப் போன தேகம், 
குளித்தும் இரண்டு நாளாயிருக்குமோ  என்ற சந்தேகம்  அவளது புடவையை  பார்க்கும் போதும், மெலிதாக வந்த நெடியிலிருந்தும் தோன்றியது. தலைமுடி எண்ணெய்  பட்டு பல நாள் கடந்திருக்கும் போல,
அவ்வளவு  செம்பட்டையாக  இருந்தது.  


என்ன மேடம்  யோசிக்கிறீங்க, நானும்  ஒரு காலத்துல உங்களைப் போல
இந்த இடங்களுக்கு ஷாப்பிங் வந்தவதான். எதோ விதி, இன்னிக்கு ஒரு 
வேளை  சாப்பாட்டுக்கு கூட கையேந்த வேண்டிய நிலை வந்திருச்சு என்றாள்.


பர்சைத் திறந்து பார்த்தேன்.  நூறு ரூபாய் நோட்டுக்களாக  இருந்தது.  ஒரு  நோட்டை  கையிலெடுத்து  அவளிடம் அளிக்க கையை நீட்டினேன். 


திடீரென  ஒரு சந்தேகம் வந்து  கையை  மடக்கி  சற்று  உன்னிப்பாக 
அவளை  கவனித்தேன்.  அவளது முகத்தில்  எரிச்சல் படர்வதைப் 
பார்த்து  ஒரு அடி பின்னே  சென்று  முதல் கேள்வியை  கேட்டேன். 


இந்த நூறு ரூபாய்க்கு  நீ சாப்பாடுதான் சாப்பிடுவியா இல்ல சாக்லேட் 
வாங்கிடுவியா? 


ஏம்மா  சாக்லேட் சாப்பிட்டா என் பசி அடங்கிடுமா?  என எதிர் கேள்வி 
கேட்டாள்  


ஐஸ்கிரீம் கூட வாங்க மாட்டியா ? இது அடுத்த கேள்வி 


அவளின் பதிலும் கூட " ஐஸ்கிரீம் சாப்பிடற நிலையிலா நான் இருக்கேன்" என்று  கேள்வியாகவே  வந்தது.  அதெல்லாம் சாப்பிட்டு 
பத்து வருஷம் ஆச்சு  என்று இன்னொரு  பதிலையும்  சொன்னாள்.


ஷாப்பிங் மால் வாசலில நிற்கிற, ஏதாவது பர்சேஸ் செய்வியா 
சளைக்காமல்  அடுத்த கேள்வியை கேட்டேன். 


சலிப்போடு பதில் சொன்னாள் " இந்த நூறு ரூபாய்க்கு  இந்த மாலிலா?" 


கடைசியாகக் கேட்டேன்,"  பியூட்டி பார்லர் போய் முடிய அலங்காரம் 
செய்துக்குவியா"  என்று.
எரிச்சல் போங்க சூடாக பதில் வந்தது.
 
"அந்த பக்கம் கால் வைச்சும் பத்து வருஷம் ஆச்சு. "

அடுத்த கேள்வி கேட்டால்  போம்மா, நீயும் உன் காசும் என்று முகத்தில் 
அடித்தது போல் சொல்லி விடுவாள்  என்று அச்சமாக இருந்ததால்
அவசரம் அவசரமாக சொன்னேன்.  

" இரு என் கணவரை  வரச்சொல்றேன்.  நீ, நான், அவர் மூணு பேருமே 
ஹோட்டல் போய் சாப்பிடலாம் " என்றேன். 

அவர் என்னைப் பார்த்தா  கடுப்பாக மாட்டாரா என்று கேட்டாள்.

நான் நிதானமாக  பதில் சொன்னேன். 

"சாக்லேட் சாப்பிடாத, ஐஸ்கிரீம் சாப்பிடாத, ஷாப்பிங் போகாத,
பியூட்டி பார்லர் போகாத ஒரு பொண்ணு  எப்படி  இருப்பா  என்று 
அவர் கண்டிப்பா பார்க்கனும்"





கண்டிப்பாக படிக்க வேண்டிய பின் குறிப்பு

ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சலை தமிழாக்கியுள்ளேன். அவ்வளவுதான்.  பெண்கள் அதிக செலவு செய்கின்றார்கள்  என்று  சொல்லப்படுகின்ற  கருத்துக்களில்  எனக்கு கண்டிப்பாக உடன்பாடில்லை. பெண்கள் கையில் 
ஏற்கனவே ஆட்சி வந்து விட்டது  என்பது போல இன்னொரு விஷமப் 
பிரச்சாரம்  நடைபெறுகின்றது.  அது பற்றி  நாளை.  

No comments:

Post a Comment