Tuesday, May 17, 2011

கட்சி மாறிகளுக்கு செம அடி

கடந்த மார்ச்  மாதம்   தாவி வா, தாவி வா சீட் பெற தாவி வா என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன்.  திமுகவில்  இம்முறை  சேகர்பாபு, கம்பம் ராமகிருஷ்ணன், அனிதா ராமகிருஷ்ணன், மு.கண்ணப்பன், திருப்பூர் கோவிந்தசாமி,  ஆகிய  சமீபத்து கட்சி மாறிகளுக்கும்  எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் . ராமச்சந்திரன், திருச்சி செல்வராஜ், மைதீன்கான் ஆகியோருக்கு  சீட் கொடுத்தது பற்றி  எழுதியிருந்தேன். ஈரோடு முத்துசாமி, கடலாடி சத்தியமூர்த்தி  ஆகியவர்களை  விட்டுவிட்டதாக அனானி ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

இந்த பதினோரு கடசிமாறிகளில்  எட்டு பேரை  மக்கள் புரட்டி புரட்டி 
துவைத்து விட்டனர். அதிலும் திருப்பூர் ஆசாமிக்கு மரண அடி. அனிதா ராதாகிருஷ்ணன் மட்டும்தான் கௌரவமான  வெற்றி பெற்றவர். மைதீன்கானும், வேலுவும் தோல்வியின்  விளிம்பு வரை சென்று  பிழைத்தவர்கள்.  

ஆக  கட்சி மாறிகளை  மக்கள்  ஏற்றுக் கொள்வதில்லை  என்று நிரூபணமாகி  விட்டது. 
இப்படி முடிக்கத்தான்  ஆசைப்பட்டேன். 

ஆனால் வீசிய அலையில்  சி.பி.ஐ. கட்சியின்  கட்சி மாறி வேட்பாளர்கள் குடியாத்தம்  லிங்கமுத்துவும்  தளி ராமச்சந்திரனும்  வெற்றிக் கரையேறியது   கொஞ்சம்  நெருடலாகவே, ஏன்  உண்மையில் மிகவும் 
வருத்தமாகவே  உள்ளது.
 

No comments:

Post a Comment