Friday, June 10, 2011

வெட்கத்தில் தலை குனிவோம்






இந்தியாவின்  மிகச்சிறந்த  ஓவியக் கலைஞன்  என்று  உலக நாடுகளால்
போற்றப்பட்ட  எம்.எப். ஹுசைன்  மறைந்து விட்டார். இந்தியாவின் 
பிக்காசோ  என்று  அழைக்கப்பட்ட  அந்த மனிதர்  இங்கிலாந்தில் மறைந்தார். இங்கிலாந்திலேயே  புதைக்கப்படவுள்ளார். 


பத்மஸ்ரீ  தொடங்கி  பதமவிபூஷன்  வரை  உயரிய  விருதுகளை அளித்து
அலங்கரித்த  அரசு, ஐந்தாண்டுகள்  மாநிலங்களவையில்  கூட 
அமரவைத்தது.  ஆனால்  இறந்த பின்பு ஆறடி நிலம் கூட    அவருக்கு 
இந்தியாவில்  கிடைக்கவில்லை. 

இந்தியா  ஒரு மதச்சார்பற்ற  நாடாக  இருக்கக்கூடாது   என்று  சங்
பரிவார அமைப்புக்கள்  விரும்புகிறார்கள்,  அவர்கள்  மத நல்லிணக்கத்தை  சீர் குலைக்க முயற்சிக்கிறார்கள்  என்பதற்கான 
ஒரே  உதாரணம் அவர்கள்  ஹுசைனை  இந்தியாவை விட்டே 
துரத்தியதுதான். 


இந்து கடவுளை  அவர் அவமானப்படுத்தினார்  என்று  வேகமாக 
குற்றம் சுமத்துபவர்கள்   அமிதாப் பச்சன்  கூறியுள்ள  இரங்கல் செய்தியை
பாருங்கள். 

" நான்  விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியபோது  ஹுசைன் 
தனக்கு  அனுமார்  படம்  வரைந்து  அளித்தார், அது  தனக்கு  மிகவும்
சக்தி அளித்தது  '  

கலைஞனை  மதிக்காத ,  சொந்த  மண்ணில்  இறக்க அனுமதிக்காத ,
புதைக்காத  தேசத்தில்  வாழ்கிறோம் என்பது  கொஞ்சம் தர்ம சங்கடமாக 
உள்ளது. வருத்தத்தில்  மட்டுமல்லாமல்  வெட்கத்திலும்  தலை குனிவோம்.

  

No comments:

Post a Comment