Monday, June 20, 2011

சாமியாரின் படுக்கையறையில் ரகசிய பொக்கிஷக் குவியல் ஏன்?





இறந்து போன சத்ய சாய் பாபாவின்  படுக்கையறையை  திறந்து 
பார்த்த போது  பணமும்  தங்கமும்  வைரமும்  குவிந்து கிடந்ததாம்.


எண்ணிப் பார்க்கையில்  12  கோடி ரொக்கம், 98  கிலோ தங்கம், சில 
தங்கச்சிலைகள்,  வைர ஆபரணங்கள் இருந்ததாம்.  நேபாள மன்னர் 
அளித்த  நகையெல்லாம் காணோம்  என்று பக்தர்கள் புலம்புகின்றனராம்.


முற்றும் துறந்த முனிவர்களுக்கு  எதற்கு இத்தனை செல்வம்? அதுவும்
ரகசியமாக? சத்யசாய் பாபாவின் சொத்துக்கள் வெளிப்படையானது 
என்று  இத்தனை நாள் சொல்லி வந்தது கட்டுக்கதை  என்பது இந்த 
படுக்கையறை  பொக்கிஷம்  அம்பலப்படுத்தி விட்டது. 


எப்படி  இந்த சொத்து, ஏன் ரகசியமாய்  பதுக்கி வைக்கப்பட்டது என்பதை
அடுத்த ஜென்மத்து  கர்நாடக மாநிலத்தில்  பிறக்கப்போகும்  பிரேம் சாய்
வந்து சொல்வாரோ? 


மிஸ்டர் புதிய பரிசுத்தம் அண்ணா ஹசாரே அவர்களே,     
லோக் பால் மசோதாவில்  சாமியார்களை  சேர்த்து விட்டீர்களா?
 

No comments:

Post a Comment