Saturday, July 9, 2011

அட . . . . பத்மனாபா!




ஐம்பொன் ரத்தினங்கள்
ஐந்து அறையில்  தங்கக் குவியல்கள்
ஆறாவது. . . திறக்கவேயில்லை...
ஆனாலும்  மதிப்பு லட்சம் கோடி

உணவு, உடல் நிலை, கல்வி
எதற்கும் பயன்படாமலே . .
நூற்றைம்பது வருடங்களாய் ...

யார் இதைக் கொண்டு வந்தது?
யாரிடம் இதை கேட்பது?

எதைக் கொண்டு வந்தாய்
நீ  இழப்பதற்கு -
என்று  உபதேசம் செய்தவனிடமா?

அட பத்மனாபா!


கவிதை :  மதுரை பாரதி

1 comment:

  1. ராமன் அவர்களே ! மதுரை பாரதியை தனியாக ஒரு தளத்தை உருவாக்கச்சொல்லுங்கள். சில சமயங்களிலவருடைய எழுத்துக்களை படிக்க முடியாமல் போய்விடுகிறது ,---காஸ்யபன்

    ReplyDelete