Thursday, July 21, 2011

கலப்பின "வேங்கை"





மகனின் விருப்பப்படி  கடந்த சனிக்கிழமை  நானும் அவனும்
வேங்கை திரைப்படம்  சென்றோம். படம் முடிந்து வெளியே
வந்தால் வெள்ளைச்சட்டை முழுதும்  படம் முழுக்க
பீரிட்டு  வந்த ரத்ததால்  சிவப்பாக மாறிப்போன பிரமை
தோன்றியது.


இன்னும்  எத்தனை  காலத்திற்கு  நம் இயக்குனர்கள்
அரிவாள்கள், டாடா சுமோக்கள், வெள்ளை வேட்டி
சட்டை அரசியல்வாதிகள், பழிவாங்குதல் ஆகியவற்றை
மட்டுமே  நம்பி படமெடுக்கப் போகின்றனர் என்று
தெரியவில்லை


தேசிய விருது பெற்ற தனுஷ் தொடங்கி ராஜ் கிரண், பிரகாஷ்ராஜ்
போன்ற சிறந்த கலைஞர்கள்  வீணடிக்கப்பட்டுள்ள ஒரு படம்.
ஒட்டு மொத்த காட்சிகளிலும் மெழுகு பொம்மை போல
வெறுமனே வந்து போகும் கதாநாயகி, பாடல் காட்சிகளில்
மட்டும் ஏன் அத்தனை கோணங்கித்தனம் செய்கிறார்? புரியாத
பாடல் வரிகளுக்கு புரியாத முக பாவம்.


நான்கு  பேரை வெட்டியதற்காக கைது செய்யப்படுகின்ற தனுஷிற்கு
மலேசியா செல்ல எப்படி  விசா கொடுத்தார்கள்.



இயக்குனர் ஹரியின் முந்தைய படங்கள் சாமி, ஐயா, ஆறு, வேல்,
சிங்கம் ஆகிய படங்களை கொஞ்சம் கொஞ்சம்  தொலைக்காட்சியில்,
பேருந்தில் பார்த்துள்ளேன். அத்தனை படங்களையும் மிக்ஸியில்
போட்டு கலந்து வேங்கை  என புதுப்படமாக கொடுத்துள்ளார்.


பல முக்கியமான படங்களை பார்க்காத எனக்கு வேங்கை போன்ற
தண்டனை தேவைதான்.

2 comments:

  1. please try the film "angaadi theru" and you will feel that there are some good movies which show the challanges faced by ordinary and the downtradon - J.SURESH, ICEU, ARNI UNIT

    ReplyDelete
  2. please try the film "angaadi theru" and you will feel that there are some movies which show the real challanges faced by the ordinary man and the downtradon - J.SURESH, ICEU, ARNI

    ReplyDelete