Saturday, July 23, 2011

கண் தானம் செய்யுங்கள், சிங்கள சாத்தான்களின் உபதேசம்



இத்தோடு இணைக்கப்பட்ட  வீடியோ காட்சியைப் பாருங்கள்




ஆந்திராவில்  உள்ள ஒரு தோழர் பஞ்சாபில் உள்ள ஒரு
பெண் தோழருக்கு  அனுப்ப அந்த பஞ்சாப் தோழர் எனக்கு
அனுப்பினார்கள்.




கண்  தானத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்ற
விளம்பரப்படம் அது. உருக்கமாகவும் இருந்தது,
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்
இருந்தது. எனது கம்ப்யூட்டரில் ஸ்பீக்கர் வேலை
செய்யாததால்  என்ன மொழி என்று தெரியாமல்
ஆங்கில சப் டைட்டில் மட்டும்  பார்த்துக்
கொண்டிருந்தேன். 



இறுதியில் தான் எரிச்சல் கொடுத்த அந்த
ஸ்லைட் வந்தது. விளம்பரத்தை வெளியிட்டது
இலங்கை கண்தான அமைப்பு  என்று.



இலங்கை நாட்டவருக்கு  கண் தானம் பற்றி
பேசவெல்லாம் அருகதை  இருக்கிறதா என்ன?



மரண தண்டனை விதிக்கப்பட்ட போராளிகள்
குட்டி மணி, ஜகன் ஆகியோரின் இறுதி விருப்பம்
தங்களது கண்கள்  தானம் செய்யப்பட வேண்டும்
என்பதுதானே!



1983 ல் வெலிக்கடை  சிறையில் சிங்கள ராணுவம்
அவர்களைக் கொன்ற போது துப்பாக்கி கத்தியால்
கண்களை நோண்டி எடுத்து பூட்ஸ் கால்களால்
மிதித்து  அழித்ததை  உணர்வுள்ள எந்த ஒரு
தமிழனாலும் மறக்க முடியுமா?
மன்னிக்க முடியுமா?



இன்னும் கருத்துக் குருடர்களாக அல்லவா
இலங்கை சிங்களர்கள் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்?



தமிழர்கள் படும் இன்னல்களை கண்டும் காணாமல்
இருக்கும் இலங்கை மக்கள்
என்னைப் பொறுத்தவரையில்
பார்வையற்றவர்களே!





இதிலே  இன்னொரு கொடுமை என்னவென்றால்
இலங்கையிலே  இழைக்கப்பட்ட  எந்த ஒரு கொடுமை
பற்றியும் கடந்தாண்டு ஆயிரக்கணக்கானவர்கள்
கொல்லப்பட்டது  உட்பட  எதுவுமே
அந்த பஞ்சாப் தோழருக்கும் சரி ஆந்திரத்
தோழருக்கும் சரி தெரியவேயில்லை.



No comments:

Post a Comment