Saturday, July 30, 2011

உளவுத்துறைக்கு நன்றி


நாடாளுமன்றக்   மழைக்காலக்  கூட்டத் தொடர்   தொடங்கும்   
நாளான  ஆகஸ்ட் முதல் தேதி அன்று   அனைத்து  அலுவலகங்கள் 
முன்பாகவும் " இன்சூரன்ஸ் துறையை  சீரழிக்கும்  நோக்கத்தோடு 
அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்களை  நிறைவேற்றக் கூடாது "
என  வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்  நடத்த வேண்டும்  என்பது  எங்கள் 
அகில இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் சங்கத்தின்  அறைகூவல். 


இம்முடிவு முன்னரே   தோழர்கள் மத்தியில்  எடுத்துச்செல்லப்பட்டது 
என்றாலும்  கோரிக்கையை  விளக்கி  தமிழில்  ஒரு சுற்றறிக்கை 
அனுப்பினால்  நன்றாக  இருக்கும்  என்று  நேற்று  காலையில் 
யோசித்திருந்தேன். அலுவலகம்  சென்றதும் எதோ ஒரு பிரச்சினை,
விவாதம், தீர்வு  என சுற்றறிக்கை  தயாரிக்க வேண்டும்  என்பது 
நினைவுக்கே  வரவில்லை. 


மதிய உணவிற்காக  டப்பாவை திறந்தால், அப்போது  வேலூர்
மாவட்ட சி.ஐ.டி இன்ஸ்பெக்டர்  தொலைபேசியில் கூப்பிட்டு 
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி என்ன போராட்டம்  செய்யப் போகின்றீர்கள்
என்று  கேட்டார். 
சாப்பிட்டு முடிக்கும் முன்பாக  கடலூர் மாவட்ட சி.ஐ.டி 
இன்ஸ்பெக்டர்  தொலைபேசியில்  அழைத்து  கடலூர் மாவட்டத்தில்
எங்கெல்லாம்  ஆர்ப்பாட்டம்  செய்யப் போகின்றீர்கள்  என்றார்.  

ஆகா ; உளவுத்துறையே  மும்முரமாக இருக்கிறதே, நாம் 
விரைவாக சுற்றறிக்கையை  உணர்வு பூர்வமாக அனுப்ப 
வேண்டுமே  என்று நினைத்துக் கொண்டேன்.

தொழிற்சங்க நடவடிக்கையை  வேகப்படுத்த உதவிய 
உளவுத்துறையே  உனக்கு நன்றி

 
 
 

1 comment: