Tuesday, August 16, 2011

மந்திரக் கோல் கேட்கும் மதி கெட்ட மன்மோகன் சிங் எனும் மிகப் பெரும் திருடர்




விலைவாசியைக்  குறைக்க  என்னிடம்  மந்திரக்கோல்  இல்லை.
ஊழலைக்  கட்டுப்படுத்த  என்னிடம்  மந்திரக்கோல்  இல்லை
தீவிரவாதத்தை  வேரறுக்க என்னிடம்  மந்திரக்கோல்  இல்லை
வறுமையைப் போக்க  என்னிடம்  மந்திரக்கோல்  இல்லை

இப்படி  எல்லா பிரச்சினைகளுக்கும்   மந்திரக்கோலை  தேடுவதையே
பிழைப்பாகக் கொள்வது  ஒரு பிரதமருக்கு  அழகா?

தேர்தல் ஏன்? ஜனநாயகம்  ஏன்?

மந்திரவாதிகளையும்  அருள்வாக்கு  சொல்லும் பூசாரிகளையும்
பிரதமராய்  அமர வைக்கலாமே?

அனைத்துப் பிரச்சினைகளையும்  தீர்க்க  மந்திரக்கோல்
தேவையில்லை. மக்கள் மீது  அக்கறை  செலுத்தும்
நல்ல  மனம்  வேண்டும். ஐயா மன்மோகன்சிங்  அதுதான்
உம்மிடம்  இல்லை.

கையாலாகதவன்  புலம்பல்  என  தூற்றி விட்டுப் போய் விடுவார்
என  வஞ்சகமாய்  தப்பிக்கப் பார்க்கும்  மன்மோகன்சிங்கை
நேர்மையானவர்  என  யாரும் இனி சொல்லாதீர்கள்.

திருடர்களை  பாதுகாப்பவனை விட  பெரிய திருடன்
யாராவது இருக்க முடியுமா?

மன்மோகன் சிங்  அவ்வகையில்  மிகப் பெரிய திருடர்.


3 comments:

  1. Please provide link to post your articles directly to facebook.

    ReplyDelete
  2. absolutely correct! Manmohan is a curse to India.

    ReplyDelete