Saturday, August 20, 2011

மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை நல்லதுதான். ஆனால்?



கலைஞர் கட்டிய தலைமைச் செயலகத்தை மல்டி
ஸ்பெஷாலிடி மருத்துவமனையாகவும் மருத்துவக்
கல்லூரியாகவும் மாற்ற தமிழக  அரசு முடிவெடுத்துள்ளது
நல்லதுதான் . 


கோடிகளை  கொட்டி உருவாக்கப்பட்ட ஒரு கட்டிடம்
பாழும் கட்டிடமாக மாறி சமூக விரோதிகளின் 
புகலிடமாக மாறி  விடுமோ  என்ற அச்சம் இருந்தது.
அக்கட்டிடம் பயன்படுத்தப்பட வேண்டும்  என்ற 
மக்களின் உணர்வுகளை ஏற்க வேண்டிய கட்டாயம்
ஜெயலலிதாவிற்கு  வந்ததும் நல்லதுதான் .

இல்லையென்றால்  எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 
வீராணம் குழாய்கள்  காட்டுமன்னார் கோயில் 
தொடங்கி  விக்கிரவாண்டி வரையில்  சாலையில்
கிடந்து குடியிருப்பாய்  மாறியது போல ஏதாவது
நிகழ்ந்திருக்கும். கலைஞர் செய்த ஊழலை நினைவு
படுத்தவே   அவ்வாறு  அங்கிருந்து அகற்றாமல் 
வைத்திருந்தார்கள் என நினைக்கிறேன். சரி, அந்த
குழாய்கள் இப்போது எங்கே? 


மூன்று நாட்கள் முன்பு நடந்த சம்பவம்  இது. 
திருப்பத்தூரில்  அலுவலகத்திற்கு  வந்த எங்கள்
தோழருக்கு  மாரடைப்பு வர அங்கே ஒரு 
மருத்துவமனைக்கு  எடுத்து செல்கின்றனர்.
அவர்கள் ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில்
காண்பித்து விட்டு வேலூர் சி.எம்.சி  போகச்
சொல்லி விட்டனர்.  ஆம்பூர் மருத்துவமனையும்
கை விரித்து விட்டது.


மாரடைப்பு   வந்து  கிட்டத்தட்ட மூன்று
மணி நேரத்திற்குப் பிறகே  அவர்களால் சிஎம்சி
வர முடிந்தது. மிகவும் தாமதம் உயிர் பிழைக்க 
 மிக மிக  வாய்ப்பு குறைவு என்று  சொல்லியே 
உள்ளே அனுமதித்தார்கள். 


செயற்கை சுவாசம் உள்ளிட்ட எந்த சிகிச்சையும்
பலனளிக்கவில்லை.  அவர் உயிர்  பிரிந்து விட்டது.


உடனடி சிகிச்சைக்கு வாய்ப்பிருந்தால்  ஒரு வேளை
அவர்  பிழைத்திருக்கலாம்.
மாநகரங்களில்  பிரம்மாண்டமான மருத்துவமனை 
கட்டுவதை விட  சிறிய ஊர்களில்  அனைத்து அடிப்படை
வசதிகளுடன்  தரமான மருத்துவமனைகள் அமைப்பதே
அவசியமான ஒன்று.


ஜெயலலிதா இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

3 comments:

  1. நீங்கள் சொல்வது ரொம்ப சரி

    ReplyDelete
  2. இது போல சில விழயங்களில் அரசு மக்கள்நலனை மட்டும் பார்ப்பது நல்லது

    ReplyDelete
  3. அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும் என்று வைத்துகொள்ளலாமே?

    ReplyDelete