Friday, September 23, 2011

தந்தை பெரியாருக்கு பாரத ரத்னா, நோபல் பரிசு!



சேலம் பெரியார்  பலகலைக்கழக துணைவேந்தர்
திரு இளம்செழியன்  தந்தை பெரியார்  அவர்களுக்கு 
நோபல் பரிசு  தர வேண்டும்  என்று பேசியுள்ளார். 
இது மிகவும்  சரியான  கருத்துதான்.  வெறும் 
பேச்சுக்கே பாரக்  ஒபாமாவிற்கு  நோபல் பரிசு 
வழங்கியுள்ள போது  தந்தை பெரியார் ஆற்றிய 
பணிகளுக்கு  கண்டிப்பாக  நோபல் பரிசு தரலாம்.


உயிரோடு  உள்ளவர்களுக்கே  நோபல் பரிசு என்ற 
கொள்கை ஒன்று  இருப்பதால்  அதை வலியுறுத்துவதை
விட  அவருக்கு பாரத ரத்னா தரவேண்டும்  என்று 
வலியுறுத்தினால்  அது பொருத்தமாக  இருக்கும். 



11  பேருக்கு இறப்பிற்குப் பின்னே  பாரத் ரத்னா வழங்கப்
பட்டுள்ளது. அதிலும் அண்ணல்  அம்பேத்கார், ஜெயப்பிரகாஷ்
நாராயண், அபுல் கலாம் ஆசாத்  ஆகியோருக்கு  அவர்களின் 
இறப்பிற்கு  பல ஆண்டுகள் பின்பே அளிக்கப்பட்டது. 


ராஜீவ் காந்திக்கெல்லாம் பாரத ரத்னா தருகின்ற மத்திய
அரசு தந்தை பெரியாரின் பெயரை என் பரிசீலிக்கவில்லை?
அவரது வாரிசுகள்  இது  பற்றி குரல் கொடுக்குமா?


அதே போல் பாரத ரத்னா விருதுக்கு தகுதியான  இன்னொரு
தலைவர் தோழர் ஜோதி பாசு. 


இவர்களுக்கெல்லாம் விருது கொடுத்தால்தான் அந்த 
விருதுக்கு பெருமை. விருது வேண்டும் என்ற பெருமைக்கோ,
எதிர்பார்ப்போ இல்லாத தலைவர்கள் அவர்கள் என்ற போதும். 

No comments:

Post a Comment