Sunday, October 16, 2011

சாயம் வெளுத்துப் போன நடிப்பு சுதேசி அண்ணா ஹசாரே

அண்ணா ஹசாரே  என்ற புதிய உத்தமரை  ஊடகங்கள் 
தலை மேல் வைத்துக் கூத்தாடின. ஆம் அவர் உத்தமர்தான்.


ஊழல்களின் ஊற்றுக் கண்ணாக திகழும் முதலாளிகள்
ஆதரவோடு  ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய
யதார்த்தவாதி. 


ஊழல் இன்று பல்கிப் பெருக  உலகமயம்தான் காரணம்
என்பதை  சிறிது கூட  கண்டு கொள்ளாத கொள்கை வீரர்.


சங் பரிவார ஆதரவோடு முன்னுக்கு  வந்து நடுநிலை  
மனிதர்    என்று   எல்லோரையும் இளிச்சவாயராக்கிய
திறமைசாலி.


பிரதமரை  இணைக்க வேண்டும் என பேசி விட்டு பிறகு
அதைப் பற்றி கவலையே கொள்ளாத காரியவாதி.


பாஜக விற்கு  ஆதரவாக  தேர்தல் களம் இறங்கிய போது
வேடம் களையத் தொடங்கியது. 


இத்தனை நாள் இவருக்கு  ஆதரவாக, பின்புலமாக 
இருந்த பிரசாந்த் பூஷன் சங் பரிவார அமைப்புக்களால்
கடுமையாக தாக்கப் பட்டபோது, ஆர்.எஸ்.எஸ் 
கருத்தை அப்படியே  வாந்தி எடுத்து  பிரசாந்த் 
பூஷனையும்  கழட்டி விடத் தயாரான போது 
உத்தமர் வேடம் முற்றிலுமாக கலைந்து விட்டது.


இனியும் என்ன வெட்கம் அண்ணா ஹசாரே?


கதர்க்குல்லாவை கழட்டி எறிந்து கறுப்புக் 
குல்லாவை  அணியுங்கள். . .


வெள்ளை ஆடையை வீசி எறிந்து காவி 
அங்கிக்குள்  அடைக்கலம் புகுந்திடுங்கள்.


உங்களின் அடுத்த அசிங்கம்  எது என்று 
அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment