Thursday, November 24, 2011

நொந்தே போனேன்.





சில நாட்களுக்கு முன்பாக 
இப்படியுமா இழிவுபடுத்துவார்கள் 
என்று ஒரு பதிவு  எழுதியிருந்தேன்.
தற்கொலை செய்து கொள்ள தூக்கில்
தொங்கும் கணவனைப் பார்த்து
அது எனது புதிய ஸ்கார்ப் என்று
மனைவி கதறுவதாக  இருந்த
படத்தைப் பார்த்து எழுதியது.


இன்று வெளியான ஆனந்த விகடனில்
பொக்கிஷம் பகுதியைப் பார்த்து
அதிர்ந்து போனேன். 


அதிலே  மதனின் ஜோக் ஒன்று


தற்கொலை செய்ய முயலும் கணவனைப்
பார்த்து மனைவி கண்டிக்கிறாள்.


"கொஞ்சமாவது உங்களுக்கு புத்தி இருக்கா!
அது நான் துணி உலர்த்தரதுக்காக வாங்கி
வெச்சிருக்கிற கயிறு '


காலம் காலமாக இப்படி பெண்களை 
இழிவு படுத்தும் போக்கைப் பார்த்து
நொந்தே போனேன்.
 

1 comment: