Thursday, November 3, 2011

உச்ச நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்கியது கேரள அரசு



உச்ச நீதிமன்றத்தால்  ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட
கேரள முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண பிள்ளை, 93 நாட்களில்
விடுதலையாகிவிட்டார்.  மேல் முறையீடு  செய்து அவர் விடுதலை
பெறவில்லை. 


நம்மூரில் அண்ணா பிறந்த நாள் என்று சொல்லி 
ஆளும் கட்சியின் குற்றவாளிகள் தண்டனை குறைப்பு பெற்று 
வெளி வருவது போல கேரள மாநில அமைப்பு தினத்தன்று 
தண்டனை குறைப்பு பெற்று  அண்ணன் பாலகிருஷ்ண பிள்ளையும்
வெளி வந்து விட்டார்.


ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட  அவரது சிறைவாசமே 
சொகுசாகத்தான் இருந்தது. இப்போது முற்றிலுமாக வெளியே 
வந்து விட்டார். 


உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை இதை விட வேறு எப்படியும்
வேறு யாரும் அசிங்கப்படுத்த முடியாது. 


ஊழல் எதிர்ப்பு உத்தமர் அண்ணா ஹசாரே இது பற்றி ஏதாவது 
வாய் திறப்பாரா?  

3 comments:

  1. சும்மா தமாஷ் பண்ணாதீங்க சார், அண்ணா இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் வர மாட்டார்...

    ReplyDelete
  2. அட அந்த ஊர் எதிர்கட்சியே அமைதியாக இருக்குது. அன்னா என்ன செய்ய போறார்

    ReplyDelete
  3. தோழர் அச்சுதானந்தன் வழக்கு தொடுத்துள்ளதை
    தோழர் வேல்முருகன் படிக்கவில்லை போலும்!

    ReplyDelete