Monday, January 2, 2012

இந்தப் பாவிகளுக்கு மன்னிப்பே கிடையாது.




இன்று காலை நாளிதழில் பார்த்த செய்தி இது. கர்னாடக மாநிலம் பீஜப்பூர் நகரில்  தாலுகா அலுவலகத்தில்  பாகிஸ்தானின் தேசியக் கொடியை  பறக்க விட்டிருந்தார்கள். இதை செய்தவர்களுக்கு ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் இருக்க முடியும். பதட்டத்தையும் கலவரத்தையும்  உருவாக்குவது  என்பதுதான்.


சில விஷயங்கள் நெருப்பில்லாமலே  பற்றிக் கொள்ளும், வேகமாய் பரவும். பொதுவான சமயங்களில் இந்தியா பற்றியோ, அது அமெரிக்காவிடம் அடிமையாய் கிடப்பது பற்றியோ கவலைப்படாதவர்களுக்குக் கூட இது மாதிரி சந்தர்ப்பங்களில் மட்டும் வேகம் பிறக்கும். தேசப் பற்று ஊற்றெடுத்து பெருக்கெடுத்து ஓடும். பாகிஸ்தானின் கொடி என்பதைத் தாண்டி மத மோதல்களாய் மாறும்.


இந்த செயலை செய்த விஷமிகளின் நோக்கமும் இதுதான். அவர்கள் யாரென்று கண்டு பிடிக்கப்பட்டு, அவர்கள் யாராக  இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment