Sunday, February 26, 2012

கல்யாண கலாட்டாக்கள் கூட இல்லாத ஒரு மாநாடு.















மார்க்சிஸ்ட்  கட்சியின்  இருபதாவது  மாநில மாநாடு 
நடந்த லலிதா மஹால் திருமண மண்டபத்திற்கு  வெளியே
ஒரு காட்சி. 

மண்டபத்திற்கு   எதிரே  இருந்த வீட்டின் உரிமையாளர்  
மிக்க மகிழ்ச்சியோடு  என்னிடம் கூறியது.

" ஒரு கட்சியின் மாநில மாநாடு  எதிரில் நடக்கப் போகின்றது
என்று  தெரிந்ததும் மிகவும் கவலைப்பட்டோம், பதட்டப்பட்டோம்,
என்ன கலாட்டா நடக்குமோ, வருபவர்கள் எப்படியெல்லாம் 
நடந்து கொள்வார்களோ  என்று மிகவும் டென்ஷனாக இருந்தது,
போலீஸ் பாதுகாப்பு கூட கேட்கலாம் என்று யோசித்தேன். ஆனால்
இரண்டு நாட்களாக மாநாட்டுப் பிரதிநிதிகள் அமைதியாக 
வருகின்றார்கள் , போகின்றார்கள். சிறு குழப்பம் கூட இல்லை. 
திருமணம் நடந்தால் ஏற்படும் இடையூறில் சிறு பகுதி கூட
மாநாட்டால் எங்களுக்கு ஏற்படவில்லை "     

இதைக் கேட்கையில் மிகவும் பெருமையாக இருந்தது.

கம்யூனிஸ்டுகள்  என்றால் கட்டுப்பாடு  என்றும் ஒரு அர்த்தம்
உள்ளதல்லவா?    

1 comment: