Monday, March 26, 2012

ராணுவ தளபதிக்கு போதி மரம் எங்கே முளைத்தது?




இன்றைய பரபரப்புச் செய்தி ராணுவ தளபதி ஜெனரல்
வி.கே.சிங் அவர்களின் பேட்டி. ராணுவத்தில் தற்போது
உபயோகத்தில் இருக்கும் வாகனங்களை மீண்டும் 
வாங்க அனுமதித்தால் பதினான்கு கோடி ரூபாய் 
லஞ்சம் அளிப்பதாக  ஓய்வு பெற்ற இன்னொரு ராணுவ
அதிகாரி கூறியதாகவும்  அதை ராணுவ அமைச்சர்
அந்தோணியிடம் தெரிவித்ததாகவும்  அவர் சொல்லி
உள்ளார்.

இந்த விபரங்கள் எல்லாமே உண்மையாக இருக்கலாம்.
ராணுவ கொள்முதலும் ஊழலும் ஒட்டிப் பிறந்த 
இரட்டையர்கள். தோட்டா முதல் சவப்பெட்டி வரை
ஊழல் நடைபெற்றதை நாடு பார்த்துள்ளது.

இன்று இத்தகவலை பத்திரிக்கைகளிடம் பகிர்ந்து
கொள்ளும் தளபதி இத்தனை நாள் என்ன செய்து
கொண்டிருந்தார்? 

அவர் வயது பிரச்சினை சாதகமாக முடிந்திருந்தால்
இப்போது கூட அவர் வாய் திறந்திருப்பாரா என்று
சந்தேகமாக உள்ளது. அதனால்தான் அவரைப்
பார்த்து கேட்கத் தோன்றுகிறது.

உங்களுக்கு போதிமரம் இப்போதுதான் முளைத்ததா?
 

No comments:

Post a Comment