Tuesday, May 15, 2012

சமத்துவ இந்தியா படைத்திடுவோம்



நாடாளுமன்ற 60ம்ஆண்டு விழாவில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்



புதுதில்லி, மே 13-
ஒளிரும் இந்தியாவுக்கும் துயரத் தில் ஆழ்ந்திருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முரண்பாட்டை - சமத் துவமின்மையை-ஏற்றத்தாழ்வை ஒழித்து சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பொறுப்பினை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன் றக் குழுத்தலைவரும், மாநிலங்கள வை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி வேண்டுகோள் விடுத்தார்.அதைச்செய்ய மறுத்தால், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் கூறியது போல, சமத்துவமின்மை யால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியா வின் அரசியல் ஜனநாயக கட்டமைப் பையே தகர்த்துவிடுவார்கள் என்றும் சீத்தாராம் யெச்சூரி எச்சரித்தார்.


சுதந்திர இந்தியாவின் ஜனநாயகக் காவலனாக உயர்ந்து நிற்கும் மேன் மைமிகு நாடாளுமன்றத்தின் அறுப தாம் ஆண்டு துவக்கவிழா ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட்டது. அதனை யொட்டி நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:நாடாளுமன்றத்தின் அறுபதாம் ஆண்டு பிறந்தநாளை நாடே சிறப் பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கி றது. சஷ்டியப்த பூர்த்தி என்றால் புதிய வாழ்க்கைத் துவங்குவதாக முன் னோர்கள் நம்பினார்கள். ஆயினும் அது ‘சிறந்ததோர் வாழ்க்கை’யாக இருக்கும் என்று அவர்கள் கூறவில் லை. ஆயினும் நாடாளுமன்ற மக்கள வையையும் மாநிலங்களவையையும், நம் ஜனநாயக அமைப்பு முறையை யும் எதிர்காலத்தில் சிறந்ததொன்றாக மாற்றுவது நமது கடமையாகும். இதற் குக் குறைந்தபட்சம் நான்கு அம்சங் களை நாம் பரிசீலிப்பது அவசிய மாகும்.நமது நாடாளுமன்ற நடவடிக்கை கள் குறித்து பிரிட்டன் பிரதமராக இருந்த சர் அந்தோணி ஈடன் மிகவும் புகழ்ந்து கூறிய வாசகங்களை நினை வுகூர விரும்புகிறேன். 

‘‘இந்தியாவில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மிகவும் கிளர்ச்சியூட்டக்கூடிய விதத்திலும், உற்சாகமளிக்கக்கூடிய விதத்திலும் அமைந்திருக்கின்றன. அவர்கள் நம் முடைய நடைமுறையை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றவில் லை. மாறாக, அவர்கள் நாம் கனவி லும் கருதமுடியாத அளவிற்கு பன் மடங்கு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்’’ என்று கூறி னார். உண்மைதான். 


கடந்த அறுப தாண்டுகளில், நாம் இதன் உள்ளடக் கத்தை செறிவூட்டியிருக்கிறோம். உள் நாட்டு அவசரநிலைப் பிரகடனம் மற் றும் பாபர் மசூதி இடிப்பு போன்ற சவால்களையும் எதிர்கொண்டு முன் னேறியிருக்கிறோம். 100 நாட்கள் கூடுவது அவசியம்நம் அரசமைப்புச் சட்டத்தின் மையக்கருத்து, நம் மக்களின் இறை யாண்மையையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இது நாடாளுமன் றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக் கும் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களால் நடைமுறைப் படுத் தப்படுகிறது. ஆட்சியாளர்கள் நாடாளு மன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள். நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் மக்களுக்குப் பதில் கூறக் கடமைப் பட்டவைகளாகும். நாடாளுமன்றம் முறையாக, குறிப்பிட்ட கால அளவிற்குச் செயல் படுவதன் அடிப்படையில் அதன் செயல்திறனும், பயன்பாடும் அமைந் திடும். இது தொடர்பாக இன்னும் சரி யான நடவடிக்கை நமக்குத் தேவைப் படுகிறது. கடந்த இருபதாண்டுகளில், நாடாளுமன்றம் எந்தவொரு ஆண்டி லும் நூறு நாட்களுக்கு மேல் அமர் வினை நடத்தியதில்லை. 1992இல் அதிகபட்சமாக 98 நாட்கள் நடை பெற்றிருக்கிறது. 


14ஆவது மக்களவை நாடாளு மன்ற நடவடிக்கை வரலாற்றிலேயே மிகவும் குறைவான அமர்வுகளைக் கொண்டதாக மாறிப்போனது. அதா வது 332 அமர்வுகள்தான் நடைபெற் றிருக்கிறது. சராசரியாக ஓராண்டிற்கு 66 அமர்வுகள் மட்டுமே. அதிலும் மோசமான விஷயம் என்னவெனில், இதிலும் 24 விழுக்காடு நேரம் குறுக் கீடுகளிலும், ஒத்திவைப்புகளிலும் வீணாய்ப் போயின. பிரிட்டிஷ் நாடாளுமன்றம் சராசரி யாக ஆண்டில் 160 நாட்கள் தங்கள் அமர்வினை நடத்துகின்றன என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.நாடாளுமன்றம் அதிக நாட்க ளுக்கு நடைபெறாவிட்டால், அதனால் மிகவும் விழிப்புடனிருந்து அரசாங்கத் தைக் கண்காணிப்பது என்பது வலு வாக அமைந்திடாது. இதனால், ஆட்சி யாளர்கள் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்பது பெயரளவிலான தாக மாறிப் போகிறது. இது நம் அரச மைப்புச் சட்டத்தின் அடிப்படையையே அரித்து வீழ்த்தி, ஆட்சியாளர்களை எதேச்சதிகார அணுகுமுறையுடன் செயல்படத் தள்ளிவிடுகிறது. நாடாளு மன்ற அமர்வு ஓராண்டில் குறைந்த பட்சம் 100 நாட்களாவது இருந்திட வேண்டும் என்கிற வகையில் ஓர் அர சமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். நீதித்துறையின் பங்குஇரண்டாவது பிரச்சனை, நம் நாட்டின் நீதித்துறையின் பங்கு குறித்த தாகும். நம் அரசமைப்புச் சட்டத்தை யும், நாட்டின் அனைத்துச் சட்டங்களை யும் வியாக்கியானம் செய்யக்கூடிய, நாட்டு மக்களின் உரிமைகளுக்குப் பாதுகாவலனாக இருக்கக்கூடிய நீதித் துறையின் நிலை எப்படி இருக்கிறது? சென்ற அமர்வின்போது நமது நிதியமைச்சர், உயர் நீதிமன்றங்களி லும் கீழமை நீதிமன்றங்களிலும் 3.2 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்ப தாகவும், உச்சநீதிமன்றத்தில் மட்டும் 56 ஆயிரத்து 383 வழக்குகள் நிலு வையில் இருப்பதாகவும் கூறினார். 


2010 டிசம்பர் மாதத்தில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 003 விசாரணைக் கைதிகள் விசாரணை முடியாமல் சிறையில் உழன்று கொண்டிருப்ப தாகத் தெரிவிக்கப்பட்டது. நீதி வழங்கு வது தாமதமாவது என்பது நீதி வழங் குவதை மறுப்பதாகும் என்று கூறுவார் கள். நீதி வழங்கும் முறையானது இவ்வாறு வலிமையூட்டவேண்டிய நிலையில் இருக்கிறது. தற்சமயம் நீதித்துறையின் செயல் பாடுகள் ஜனநாயகத்தின் மூன்று அங்கங்களுக்கும் இடையேயான வரம்புகளை மீறுகிறதோ என்கிற எண்ணத்தினை ஏற்படுத்தி இருக் கிறது. நீதித்துறை சட்டத்தை வியாக்கி யானம் செய்யலாம். ஆனால் அது அர சின் கொள்கைகளை உருவாக்குவ தோ அல்லது தீர்மானிப்பதோ கூடாது. நாட்டின் ஜனநாயகத்தின் மூன்று அங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதி களுடன் கலந்து ஒரு தேசிய நீதித் துறை ஆணையம் அமைக்க வேண்டி யது குறித்து ஆழமாகப் பரிசீலிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இதன் மூலம் நீதிபதிகள் நியமனம், மாற்றல், நீதிபதிகள் மீதான ஊழல்கள் குறித்து ஆய்வு செய்தல், நீதித்துறை துர்நடத்தை குறித்து வரும் புகார் களை விசாரித்தல் மற்றும் நீதித்துறை யினரும் ஓர் அமைப்பிற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என் பதை உத்தரவாதம் செய்திட முடியும். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைமூன்றாவதாக, நம் நாட்டின் முதிர்ந்த ஜனநாயக அமைப்பை, சில அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் மேலும் சிறப்பான தாக மாற்றுவதாகும். நாட்டின் வர லாற்றில் பொதுத் தேர்தல்கள் 1952ல் தொடங்கியது.
அதிலிருந்து இதுவரை மத்தியில் அமைந்த அனைத்து கடந்த 20 ஆண்டுகளில் எந்த ஒரு ஆண்டிலும் நாடாளுமன்றம் 100 நாட்களுக்கு மேல் அமர்வினை நடத்தவில்லை. அவசியம் 100 நாட்கள் அமரும் வகையில் அரசமைப்புச் சட்டத்திருத்தம் 

கொண்டுவரவேண்டும்.நீதித்துறை சட்டத்தை வியாக்கியானம் செய்யலாம். ஆனால் அது அரசின் கொள்கைகளை உருவாக்குவதோ அல்லது தீர்மானிப்பதோ கூடாது. நீதித்துறையினரும் ஓர் அமைப்பிற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்பதை உத்தரவாதம் செய்ய தேசிய நீதித்துறை ஆணையம் அமைப்பது அவசியம்.1952ல் இந்திய வரலாற்றில் பொதுத்தேர்தல்கள் துவங்கின. அன்றிலிருந்து இன்றுவரை மத்தியில் அமைந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் ஆதரவாக வாக்களித்த மக்களைவிட, எதிராக வாக்களித்த மக்களே அதிகம். இடையில் தப்பிப்பிழைத்தது ராஜீவ்காந்தி அரசாங்கம் மட்டுமே.
எனவே இந்திய ஜனநாயகம் உண்மையான அர்த்தம் பெற வேண்டுமானால் விகிதாச்சார பிரதிநிதித்துவத்துடன் கூடிய நாடாளுமன்ற அமைப்பே சரியானது.ஒளிரும் இந்தியர்கள், துயருறும் இந்தியர்கள் என முரண்பாடுகளுடனான வாழ்க்கையை இன்னும் எத்தனை காலத்திற்கு நீட்டிக்கப்போகிறோம். மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வில் சமத்துவத்தை மறுப்பதை இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரப்போகிறோம்?

நன்றி - தீக்கதிர் நாளிதழ்

No comments:

Post a Comment