Monday, May 28, 2012

இமயத்தின் உச்சியில், பனி மலையிலே .... உயர்ந்தது செங்கொடி




சிம்லா மாநகராட்சித் தேர்தலில் மேயர் மற்றும்
துணை மேயர் பொறுப்புக்களை மார்க்சிஸ்ட்
கட்சி கைப்பற்றியுள்ளது.

மேயராக தோழர் சஞ்சய் சவுகானும் 
துணை மேயராக தோழர் திகேந்தர் பன்வாரும்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் மாறி மாறி
ஆட்சியைப் பிடிக்கும் இமாச்சலப் பிரதேசத்தின்
மாற்று அரசியல் சக்தியாக மார்க்சிஸ்ட் கட்சி
மலர்ந்து வருவதன் அடையாளம் இது.

மாற்றத்தை மக்கள் விரும்புகின்றார்கள். அந்த
மாற்றம் மார்க்சிஸ்ட் கட்சியாகத்தான் 
இருக்க முடியும் என்பதை உணர்ந்துள்ளனர்.

ராஜஸ்தானுக்குப் பிறகு இந்தி பேசும்
மாநிலமான ஹிமாசலம் செங்கொடிக்கு
பச்சைக் கொடி காட்டியுள்ளது. 

தமிழக மக்கள் கவனம் கொள்ள வேண்டிய
முக்கிய செய்தி இது.
 

No comments:

Post a Comment