Saturday, June 16, 2012

புதிய கைப்புள்ளங்க, முரட்டுப் பிடிவாத மம்தாவிடம் அப்துல் கலாம் எஸ்கேப் ?



வறட்டுப் பிடிவாதம்,
முரட்டுப் பிடிவாதம்,
முட்டாள்தனமான பிடிவாதம்

இதற்கெல்லாம் அர்த்தம் தெரியுமா?

மம்தா அக்காவைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

ஐந்தாண்டு பதவியில் இருந்தவருக்கு
ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்பு
மீண்டும் ஜனாதிபதி பதவியின் மீது
ஆசை வந்தது, மம்தா அக்கா 
ஏற்படுத்திய ஆசை இது.
ஆனால் வெற்றி பெற வாய்ப்பில்லை
என்ற பின்பு கலகம் என தமிழினக் காவலர்
கலைஞரால் வர்ணிக்கப் பட்ட 
கலாம், போட்டி துவங்கும் முன்பே 
களத்திலிருந்து விலகி விட்டார்.

ஆனாலும் அவரை வெற்றி பெற
வைப்பேன், விளையாட்டு இன்னும்
முடியாவில்லை  என்றெல்லாம்
மம்தா தீதி சொல்லிக் கொண்டே
இருக்கிறார்.

ஆளேயில்லாத கடையில
மம்தா அக்கா
யாருக்கு டீ ஆத்தறாங்க?

பி.கு : அம்மா, தாயே, நான் இந்த  ஆட்டத்திற்கு
வரவில்லை என்று கையெடுத்து கும்பிடுகிறாரோ
திரு கலகம், மன்னிக்கவும் கலாம்?

சரி ஜெ அம்மா என்ன செய்யப் போறாங்க,
மம்தாவிற்கு திரு அப்துல் கலாம் கைப்புள்ள
என்றால் ஜெ விற்கு சங்மாவா?

No comments:

Post a Comment