Tuesday, July 3, 2012

திருவண்ணாமலை கொலைக்கு போலீஸ்தான் காரணம்.ஜெ வெட்கப்படுவாரா?

நேற்று திருவண்ணாமலையில் ராஜ் மோகன் சந்திரா என்ற
மனித உரிமை ஆர்வலர், காலை ஆறு மணிக்கு தேசிய
நெடுஞ்சாலையில் துடிக்க துடிக்க படுகொலை செய்யப்
பட்டுள்ளார்.

நில ஆக்கிரமிப்பு செய்யும் ஆளும் கட்சி கவுன்ஸிலர்
வெங்கடேசன் என்பவரின் அடாவடியைத் தட்டிக் கேட்டதால்
உயிரை இழந்துள்ளார்.

இதே வெங்கடேசன் என்பவர் கடந்த மாதம் மார்க்சிஸ்ட் 
கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் வீரபத்திரன் மீது
கொலை வெறித் தாக்குதல் நடத்தியவன்.

ஆளும் கட்சி என்பதால் ஜெ வின் காவல்துறை அவனுக்கு
பாதுகாப்பு அளித்தது. எந்த நடவடிக்கையும் எடுக்காததால்
அவன் உல்லாசமாக இருந்தான். இன்று அடுத்த உயிரையும்
எடுத்து விட்டான்.

இன்று ராஜ் மோகன் சந்திரா கொல்லப்பட்டதற்கு அலட்சிய
போலீஸ்தான் காரணம். காவல்துறை கண்காணிப்பாளர்
உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு ஜெ வெட்கப்படுவாரா?  

No comments:

Post a Comment