Monday, August 20, 2012

ஆரம்பிச்சுட்டாங்கய்யா, புதுசா ஒரு பிரச்சினையை ஆரம்பிச்சுட்டாங்க...




அம்மன் கோயில் திருவிழாக்களில் இந்த ஆண்டு
இரண்டு இடங்களில் நான் கவனித்த ஒரு புது
விஷயம்.

இதுநாள் வரை ஆலயத்து அம்மன் தவிர,
மின் அலங்கார விளக்குகளிலும்,
ஃப்ளெக்ஸ் போர்டுகளிலும் 
அருள் பாலித்து வந்த அம்மன்
இந்த வருடம் ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ்
சிலை ரூபத்திலும் பக்தர்களுக்கு அருளுவதை
வேலூர் சத்துவாச்சாரியிலும் அரக்கோணத்திலும்
பார்த்தேன்.

பிள்ளையாருக்கு மட்டும் சிலைகள் 
வைக்கப்பட்ட ஏகபோகம் தகர்ந்துள்ளது.

காமெராவில் பாட்டரி சார்ஜ் இல்லாததால்
புகைப்படம் எடுக்க முடியவில்லை. இன்று
காலையில் சிலையை எடுத்து விட்டார்கள்.
என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

விநாயகர் ஊர்வலம் போல கடலில் 
கரைக்கிறோம் என்று புதிய பிரச்சினைகளை
உருவாக்காமல் இருந்தால் சரி.

No comments:

Post a Comment