Tuesday, August 28, 2012

வெறியூட்டும் போலி தேச பக்தர்கள்


செகுவாராவின் படம் போட்ட டி.ஷர்ட்டுகளை புறக்கணித்து விட்டு விவேகானந்தர், பகத்சிங், நேதாஜி, சந்திர சேகர் ஆஸாத் ஆகியோர் படங்களை அணிந்து கொள்ளுங்கள் என்று உபதேசம் செய்த கும்பல் வெளியிட்டுள்ள கும்பல் வெளியிட்டுள்ள புதிய படம் கீழே.

ரூபாய் நாட்டுக்களில் காந்தி படத்தை எடுத்து விட்டு சிவாஜி, பகத்சிங், நானா சாஹிப் (அப்படித்தான் நினைக்கிறேன்)   ஆகியோர் படங்களை போட வேண்டும் என்பது இப்போதைய  உபதேசம். இவர்களுக்கு உண்மையிலேயே தேச பக்தி இருந்தால், இன்று நாடும் மக்களும் சந்திக்கும் உண்மையான பிரச்சினைகள் குறித்து ஏதாவது செய்ய வேண்டும்.

வறுமைக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக, உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை முன் வைக்க வேண்டும். அதற்காக மக்களை அணி திரட்டி போராட வேண்டும்.

அதை விட்டு விட்டு இது போன்ற வெற்று கோஷங்களை முன்வைப்பது எவ்விதத்திலும் பயன் தராது.

இன்று சிலருடைய படங்களை புதிதாக ரூபாய் நோட்டில் அச்சடித்தால் நாளை  அதுவே ஒரு கோரிக்கையாக, தலை வலியாக மாறிப் போகும்.  ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி என்று ஆரம்பிப்பார்கள். பிறகு டாடா, அம்பானி என்று கூட கேட்பார்கள்.

தேச பக்தி என்ற பெயரில் வெறியூட்டும் வேலை மட்டுமே இது.



1 comment:

  1. இருக்கவே இருக்குது ஸ்டாம்ப்!சிபாரிசு செய்யுங்க!

    செகுவாரா நாடுகள் என்ற கோடுகள் இல்லாத உண்மையான கம்யூனிஸ சுதந்திர வீரன்.

    கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு பொலிவியா காடுகளில் அலைந்து புரட்சி ஆயுதப்படையை உருவாக்கிய Che என்ற திரைப்படமே Dare to share!

    ReplyDelete