Sunday, August 26, 2012

நிலவின் முதல்வனே உனக்கு வணக்கம்



நிலவில் கால் வைத்த முதல் மனிதனே,
சந்திரன் ஒரு கடவுள் அல்ல,
பூமியின் துணைக் கோள் என்ற
அறிவியல் கருத்தை
நிலை நாட்டிய 
மனிதனே,
நீல் ஆம்ஸ்ட்ராங்கே,
கல்லை மிதித்து
அகலிகை சாபம் போக்கிய
ராமன் கதை கற்பனை.
நிலவில் நீ கால் வைத்து
பல கற்பனைக் கதைகளை
கல்லாக்கினாய்,
உலகம் இருக்கும் வரை,
நிலவு இருக்கும் வரை
உன் பெயரும் இருக்கும்
அழியா புகழோடு.
நிலவின் முதல்வனே
உனக்கு வணக்கம்.
 

No comments:

Post a Comment