Wednesday, September 19, 2012

வெள்ளிக்கிழமைதான் அம்மையாருக்கு வீரம் வருமா?

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவது என்று முடிவெடுத்த
பின்பு மம்தா அம்மையார் ஏன் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க
வேண்டும்?

அன்றுதான் நாள், நட்சத்திரம், முகூர்த்தம் எல்லாம் நன்றாக
இருக்கிறதா?

அதிகாரத்தை இழக்கவும் மனமில்லை, மக்களுக்காக 
போராடுபவர் என்ற அரிதாரத்தையும் கலைக்க முடியவில்லை.
அவகாசம் இருந்தால் அற்புதங்கள் நிகழாதா என்ற பேராசைதான்.

நாடெங்கிலும் உருவாகியுள்ள எதிர்ப்பு அலையினால் அரசு
தனது முடிவை மறு பரிசீலனை செய்தால் அதை வைத்தும்
ஆதாயம் தேடலாம்.

இதெல்லாம் தீதி கணக்கு, மன்மோகன் கணக்கு என்னவோ?
ஆனால் எல்லோருமே வெட்கம் கெட்டவர்கள். அதிகார
போதை உள்ளவர்கள். ஆகவே திடுக்கிடும் திருப்பங்கள்
நிகழ்ந்தால் ஆச்சர்யப்பட வேண்டாம்.
 

No comments:

Post a Comment