Tuesday, October 2, 2012

தமிழக மக்கள் ஆற்காட்டாரிடம் மன்னிப்பா? பரபரப்பான தகவல்

இந்த வார ஆனந்த விகடனில் நான் படித்து ரசித்த
வலை பாயுதே கமெண்ட்.

twitter.com/iyyanars :

யாரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்க விரும்புகின்றீர்கள்
என்ற கேள்விக்கு பெரும்பாலான தமிழர்களின் பதில்
ஆற்காடு வீராசாமி என்பதாக இருக்கலாம்.

இது கிட்டத்தட்ட உண்மையும் கூட.

இந்த விதத்தில் கலைஞர் அதிர்ஷ்டசாலி.

கடந்த ஆட்சியில் திட்டுக்கள் அவருக்கு விழாமல்
ஆற்காட்டாருக்கு சென்றது.

ஆனால் இந்த முறை நத்தம் விஸ்வநாதன் என்று
மின்சாரத்துறை மந்திரி இருப்பதே தெரியாமல்
எல்லோரும் அம்மாவையே திட்டிக் கொண்டுள்ளார்கள்.

அதிமுக அமைச்சர்களுக்கு திட்டு வாங்கும் பாக்கியம்
கூட கிடையாது போல......
 

1 comment:

  1. ஆட்சி வேண்டும் என்று ஆசை.. ஆனால் நிர்வாகம் செய்யும் திறமை இல்லாமல் கொட நாட்டில் போய் தூங்கி வந்து கொண்டிருந்தால் இங்கு மக்களுக்கு எப்படி நிவாரணம் கிடைக்கும். அடுத்தவர் செய்துவிட்டு போவதை உபயோக படுத்தியாவது மின்சாரம் கிடைப்பதை துரித படுத்த வேண்டும். அதிலும் அரசியலா?
    ஆட்சிக்கு வந்து இன்று வரை நீண்ட கால மின்சார தேவைக்கு இவர் எடுத்த திட்டங்கள் உண்டா...
    மக்கள் மிரட்டலுக்கு அஞ்சி சொல்ல முடியாத துன்பத்தை சகித்து போகின்றனர். தயவு செய்து மின்சாரம் பற்றி நகைசுவை எழுத வேண்டாம்.
    பலரின் வாழ்வுக்கு இதுவே ஆதாரமாக உள்ளது
    மக்களுக்கு நன்மை செய்யவே ஆட்சி..
    துதி படிகள் புகழ் பரணி கேட்டு தூங்கி வழியவா ஆட்சி..

    ReplyDelete