Tuesday, October 30, 2012

முகநூல் கோழைகளின் புகலிடமா? பொய்யர்களின் சொர்க்கபுரியா?





சற்று வேதனையோடும் கோபத்துடனுமே இந்த பதிவை எழுதுகிறேன். நட்பை வளர்ப்பதற்கான முகநூலை சில மோசடிப் பேர்வழிகள் தங்களின் மோசமான நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர். தனிப்பட்ட காழ்ப்புணர்வையும் வன்மத்தையும் வக்கிரத்தையும் வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.

நேர்மையற்றவர்கள், உண்மைகளைக் கண்டு அஞ்சுபவர்கள், தங்களது குறைகள் என்ன என்றே தெரியாமல் மாய உலகில் சஞ்சாரித்துக் கொண்டிருப்பவர்கள், நேரில் மோதுவதற்கு தைரியமற்றவர்கள், போலி முகநூல் முகவரியை உருவாக்கி அதிலே விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர்.

அவர்களால் நேரடியாக மோத முடியாது, ஏனென்றால் அவர்களிடம் உண்மை கிடையாது. அப்படி உண்மையான அடையாளத்துடன் வந்து இது போல பொய்களை அள்ளிக் கொட்டினால் அம்பலப்பட்டு அசிங்கப் படுவார்கள் என்ற பயத்தில் போலிப் பெயரில் புகலிடம் பெறுகின்றனர்.

அப்படி போலிப் பெயரில் வக்கிரத்தை, வன்மத்தை விதைப்பவர்கள் யார் என்பது பாதிக்கப்படுபவர்களுக்கு நன்றாக தெரியும்.  அப்படிப்பட்ட கோழைகளின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்க வெகு காலம் பிடிக்காது.

எப்போது உண்மையான பெயரை மறைத்து பொது வெளியில் போலிப் பெயரோடு உலா வந்தார்களோ, அவர்கள் நாகரீகமான மனிதர்களே அல்ல,  

இதைப் படிப்பவர்களில் யாராவது அப்படி போலிப் பெயரில் ஒளிந்து கொள்பவராக இருந்தால், அதிலிருந்து வெளி வந்து மனிதனாக உயிர் வாழுங்கள். அப்படி அநாகரீகமாகத் தான் நடந்து கொள்வீர்கள் என்றால் புனிதமான தலைவர்களின் பெயர்களை வைத்துக் கொண்டு அவர்களை களங்கப் படுத்தாதீர்கள்.

1 comment:

  1. நிஜ வாழ்விலும் பலர் வேடதாரிகளாகத்தான் உலவுகின்றனர்.

    ReplyDelete