Wednesday, October 10, 2012

கர்நாடகம் மட்டும் இந்தியா அல்ல; மாண்டியா மட்டும் கர்நாடகம் அல்ல




 


 சிபிஎம் மாநிலச் செயலாளர் ஸ்ரீராமரெட்டி விமர்சனம்

 பெங்களூரு, அக். 9-கர்நாடக மாநிலத்தில் பாசனத் துயரங்களை களைவதற்கு ஆட்சி யாளர்களிடம் அரசியல் உறுதி இல்லை. ஆனால், காவிரி நீர் விவ காரத்தில் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களாக செயல்படுகிறார் கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநிலச் செய லாளர் ஸ்ரீராமரெட்டி சாடினார்.

கோலாரில் திங்களன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் தண்ணீர் பற்றாக் குறை தொடர் பாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டு, விவசாயிகளி டையே ஸ்ரீராமரெட்டி பேசினார்.அப்போது அவர் கூறுகையில், தற்போது நிலவிவரும் காவிரி நீர் பங்கீடு பிரச்சனையில் நுட் பமான அணுகுமுறை தேவை. இந்த விஷயத் தை சில விஷமச் சக்திகள் கையில் எடுத்துக்கொண்டு தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக செயல்படுகின்றன எனக் குற்றம் சாட்டினார்.

தமிழகத்திற்கு காவிரி நீரை கர் நாடகம் திறந்துவிட வேண்டும் என் கிற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்யாவிட்டால் தீவிரவாதத்தில் ஈடுபடுவோம் என சில தலைவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் கள். இந்த அறிவிப்பை வெளியிட்ட தலைவர்கள் நாட்டின் உயர் அரசி யலமைப்பு சட்ட நிர்வாகத்திற்கு மிரட்டல் விடுகிறோம் என்பதை உணர வேண்டும் என ஸ்ரீராம ரெட்டி கூறினார்.மாண்டியா மாவட்டம் சிக்பல்ல பூர் மற்றும் கோலார் ஆகிய மாவட் டங்களைக் காட் டிலும் மிகச்சிறந்த பாசன வசதி பெற்று உள்ளது. 

ஆனால் இதர மாவட்டங் களில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. உணர்ச்சிமயமான விஷயமாக காவி ரிப்பிரச்சனை உள்ள நிலையில் சில அரசியல் தலை வர்கள் அதனுள் புகுந்துவிட்டனர். ஹைதராபாத்-கர் நாடகம், மத்திய கர்நாடகம் ஆகிய பகுதிகளில் நிலவுகிற மக்கள் பிரச் சனையைப் பற்றி யாரும் பேசவில்லை என்றும் ஸ்ரீராமரெட்டி கூறினார்.

தமிழகத்திற்கு தண்ணீர் பங்கீடு செய்வதில் நியாயமான நிலைப்பாடு கள் உள்ளன. தமிழக விவசாயிகளும் இந்தியர்கள்தான். கர்நாடகம் மட்டும் இந்தியா அல்ல. மாண்டியா மட்டும் கர்நாடகம் அல்ல. கர்நாட கத்தில் தண்ணீர் பிரச்சனை கடுமை யாக உள்ளதாக கூறப்படும் மாண் டியாவில் காவிரி நீரை அம்மாநிலத் தின் 45 சதவீத மக்கள்தான் சார்ந்துள் ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு ஒவ்வொரு முறை யும் தண்ணீர் திறந்துவிடும் போது எதிர்ப்பு காட்டுவதைக் காட்டி லும், மாநில அரசு அபரிமிதமான தண் ணீர் இருக்கும் போது சேமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத் தினார்.

நன்றி - தீக்கதிர் நாளிதழ்

No comments:

Post a Comment