Friday, October 12, 2012

மின் வாரிய அலுவலக எரிப்பு - அரசுக்கு ஒரு எச்சரிக்கை

வேலூர் மாவட்டம், மேல் விஷாரத்தில் உள்ள 
மின்சார வாரிய அலுவலகத்தை மக்கள் நேற்று
அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.

தொடர் மின்வெட்டால் கொதிப்படைந்த மக்கள்
மின் வாரிய அலுவலகத்திற்குச் செல்ல அதுவோ
பூட்டிக் கிடந்தது. மேலும் கொதிப்படைந்த மக்கள்
அலுவலகப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து
ஆவணங்கள், அலுவலகம் ஆகியவற்றை
அடித்து நொறுக்கி, தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

இந்த வன்முறை ஏற்றுக் கொள்ள முடியாதது.
கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் மின்சாரம் 
வந்து விடப் போவதில்லை.

ஆட்சியாளர்களின் தவறுக்கு கீழ்மட்ட ஊழியர்கள்,
அதிகாரிகளை தாக்குவதால் பயனும் இல்லை.

ஆனால் இந்த சம்பவம் அரசிற்கு ஒரு எச்சரிக்கை.
மக்கள் கோபத்தின் உச்சக்கட்டத்திற்கு 
வந்து விட்டார்கள் என்பதன் அடையாளம்.

ஏதாவது செய்து நிலைமையை சரி செய்யாவிட்டால்
மேல் விஷாரங்கள் தமிழகம் முழுதும் பரவலாம்,
தீ செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கோ இல்லை
போயஸ் கார்டன், கொட நாடு வரை பரவாது
என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
 

No comments:

Post a Comment