Sunday, November 18, 2012

மருத்துவர் ஐயா ,பூசணித் தோட்டத்தையே ஒரு பிடி சோற்றில் மறைக்க முயல்கிறார்

தர்மபுரி கலவரத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும்
சம்பந்தமே இல்லையென்று கூசாமல் பொய்
சொல்கிறார் மருத்துவர் ஐயா.

தமிழகத்தில் ஜாதிய உணர்வுகளை அரசியல் 
ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டதில்
முக்கிய இடம் இவருக்கே உண்டு.

தனது சமுதாயத்திற்கு கூட எதுவும் செய்யாமல்
திமுக போல பாமக வையும் குடும்பக் கட்சியாக
மாற்றியவர் என்ற பெருமையும் உடையவர்.

ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பையன்  மேல்
ஜாதிப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது
மோசடி காடுவெட்டியின் குரலை இவரும்
எதிரொலித்து விட்டார்.

இதற்காக திருமண வயதை உயர்த்த வேண்டும்
என்று கோரிக்கை வேறு வைக்கிறார். ஹரியானா
கட்டாயப் பஞ்சாயத்துக்காரர்களுக்கும்  இவருக்கும்
பெரிய வித்தியாசமில்லை. இருவரும் பெண்கள்
சுதந்திரத்திற்கு எதிரானவர்கள்தான்.

இப்படி பொய் பேசிக் கொண்டிருப்பதால்தான்
மருத்துவர் ஐயாவின் தளம் கரைந்து கொண்டே
இருக்கிறது என்பதை அவர் உணர்ந்து கொள்வது
நலம்.
 

3 comments:

  1. //ஐயாவின் தளம் கரைந்து கொண்டே
    இருக்கிறது//

    தளம்னு ஒண்ணு இருந்திச்சா ...?

    ReplyDelete
  2. இதையும் முழுமையாக படியுங்கள்.

    http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/

    ReplyDelete
  3. உங்களைப்போன்றவர்களாலும் ஆதிக்க அரசியல்வியாதிகளாலும் தொடர்ந்து திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வந்த என் சமுதாயத்திற்கு என் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி , ஒன்றுதிரட்டி போராடி இருபது சதவிகித இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தவர் மருத்துவர் அய்யா அவர்கள் .

    ReplyDelete