Tuesday, March 5, 2013

பாண்டி முதல்வர் ரங்கசாமியை அசிங்கப் படுத்தியுள்ள அவரது கட்சிக்காரர்கள்





கடந்த சனிக்கிழமையன்று எங்கள் சங்க மகளிர் மாநாட்டிற்காக புதுச்சேரி சென்றிருந்தேன். அங்கே கண்ணில் பட்ட ஒரு சுவரொட்டியின் வாசகம் இது.

“ எங்கள் அரசியல் கொம்பன் ரங்கசாமியின் அழைப்பை ஏற்று மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு நன்றி.”

தங்கள் தலைவரை வித்தியாசமாக அழைக்க வேண்டும் என்று விரும்பிய விசுவாசிகள் அவருக்கு கொடுத்துள்ள புதுப்பட்டம் அரசியல் கொம்பன். கும்கி பட பாதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

கொம்பனை ஒரு அழிவு சக்தியாக, வெறி பிடித்த காட்டு யானையாக கும்கியில் சித்தரித்திருப்பார்கள். தங்கள் தலைவருக்கு வித்தியாசமான அடைமொழி கொடுக்க நினைத்த அவர்கள் அவரை அழிவு சக்தியாக்கி அசிங்கப்படுத்தி விட்டனர்.

இல்லை உண்மையைத்தான்  சொல்லி விட்டார்களோ?

No comments:

Post a Comment