Friday, May 10, 2013

சோனியாம்மா, இந்த ஆட்டை முன்னாடியே வெட்டிருக்கலாமே

சோனியாம்மா,

மச்சான் லஞ்சம் வாங்கிய காரணத்தால் ரயில்வே அமைச்சர்
பவன் குமார் பன்சால்  ராஜினாமா செய்தாயிற்று. அதன் மூலம்
நாங்கள் ஊழலை ஆதரிக்க மாட்டோம் என்று காங்கிரஸ்காரர்கள்
டயலாக் பேசவும் சீன் போடவும் வாய்ப்பு கொடுத்தாச்சு.

சரி இந்த மனுஷன முன்னாடியே ராஜினாமா செய்யச் சொல்லி 
இருந்தா நாடாளுமன்றமாவது நடந்திருக்குமே,

ஆட்டை பலி கொடுக்கிறது  முடிவு பண்ணிட்டீங்க,
அதை முன்னாடியே வெட்டியிருந்தா ரெண்டு மூணு நாளு
கலாட்டாவாவது மிச்சமாயிருக்குமே,

எதிர்கட்சிக்காரன் என்ன சொல்றது, நாம என்ன கேக்கறது என்ற
உங்க நல்ல எண்ணத்தை  அகம்பாவம்னு  சொல்ல முடியுமா என்ன?

சரி அஸ்வினி குமார் ஆட்டை எப்ப வெட்டப் போறீங்க?

ஆனா ஒரு ஆட்டை மட்டும் ஒன்பது வருஷமா வெட்டாம
தீனி போட்டு வளர்க்கிறீங்க?
 

2 comments:

  1. //ஆனா ஒரு ஆட்டை மட்டும் ஒன்பது வருஷமா வெட்டாம தீனி போட்டு வளர்க்கிறீங்க?//

    ஓவரா 'பசி'ச்சா அதையும் வெட்டிடுவாங்க ...

    ReplyDelete
  2. நீங்க சொல்லுகிற ஆட்ட என்றைக்கோ காயடிச்சு உட்டுட்டாங்க.

    ReplyDelete