Thursday, May 30, 2013

அண்ணனுக்கு அஞ்சு வருஷம் பிரச்சினையில்லை. அனுபவி ராஜா....

இந்திய தொலைக்காட்சி  வரலாற்றிலேயே முதன் முறையாக,
மன்னிக்கவும், அரசியல் வரலாற்றிலேயே இரண்டாம் முறையாக
பிரதமர் ஒருவர் மக்களை சந்திக்காமல் நாடாளுமன்ற உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.லோக்சபா உறுப்பினராக அல்ல, 
அவரது சொந்த மாநிலம் பஞ்சாபிலிருந்து கூட எம்.பி ஆக
முடியாதவர் இவர். வேட்பு மனு தாக்கல் செய்த அன்று அஸ்ஸாம்
மக்கள் கறுப்புக் கொடி காட்டினார்கள் என்பது வேறு விஷயம்.

மக்களைச் சந்தித்து மக்களவை உறுப்பினராகக் கூட ஆக முடியாத
ஒரு நபர் பிரதமராகும் அவலம் இந்தியாவைத் தவிர வேறு எங்கும்
கிடையாது.

போட்டியிட்ட ஒரு தேர்தலில் பரிதாபமாக தோற்றுப் போனவர்
மன்மோகன்சிங் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? 1999 ல்
தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு மிகவும் மோசமாக
பாஜக வின் விஜய் குமார் மல்ஹோத்ராவிடம்  தோற்றுப் 
போனவர் மன்மோகன்சிங். 

அதன் பின்பு அவர் மக்களவைப் பக்கம் தலை வைத்தே 
படுக்கவில்லை.மக்களை சந்திக்கும் அவசியம் இல்லாததால்
மக்களின் பிரச்சினைகள் என்ன என்று புரியவே புரியாத
பொருளாதரக் காகிதப் புலி.  

எது எப்படியோ அண்ணனுக்கு இன்னும் ஐந்து வருடம்
பிரச்சினையே இல்லை. அடுத்த தேர்தலில் காங்கிரஸ்
மண்ணை கவ்வினாலும் கவலை இல்லை.

வீடு உண்டு, போன் உண்டு, ஏரோப்ளேன் டிக்கெட் உண்டு,
சம்பளம் உண்டு, பயணப்படி உண்டு, பார்லிமென்ட்
காண்டீனில் மலிவு விலை சப்பாத்தியும் டீயும் உண்டு.

அனுபவிங்க ராஜா, அனுபவிங்க











No comments:

Post a Comment