Friday, July 12, 2013

காங்கிரஸ் கட்சியின் காமெடி பீஸ் தலைவர் பேச்சை இப்படி உதாசீனம் செய்யலாமா?





போதி கயா குண்டு வெடிப்பில் நரேந்திர மோடிக்கும் பாஜகவும் தொடர்பு உண்டு என்று காங்கிரஸ் கட்சியின் காமெடி பீஸ் தலைவர் திக்விஜய் சிங் திருவாய் மலர்ந்து நான்கு நாட்களாகிறது. இன்னமும் அவர் பல்டி அடிக்கவில்லை.

நிதீஷ் குமாரை மன்னிக்க மாட்டோம் என்று நரேந்திர மோடி சொன்னதற்கும் ராமர் கோயில் கட்டுவோம் என்று பாஜக வின் அமித் ஷா சொன்னதற்கும் போதி கயா குண்டு வெடிப்பிற்கும் தொடர்பு இருப்பது உங்களுக்கெல்லாம் புரியவில்லையா என்று அவர் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் ஆவேசமாக வேறு கேட்டுள்ளார்.

தான் சொன்னதை வழக்கமாக மறு நாளே பல்டி அடித்து வேறு வியாக்யானம் கொடுக்கும் திக்விஜய் சிங் இந்த முறை இன்னும் பல்டி அடிக்கவில்லை.

மத்திய அரசுக்கு இரண்டு ஆலோசனைகள்.

ஒன்று திக்விஜய் சிங் சொன்ன குற்றச்சாட்டுக்கள் உண்மையா என்று விசாரியுங்கள்.

இல்லையேல் அவரை மன நலக் காப்பகத்திலாவது சேர்த்து விடுங்கள்.

என்னத்தான் மிகப் பெரிய காமெடி பீஸாக இருந்தாலும் இரண்டு சுப்ரமணிய சாமிக்களை இந்தியா தாங்காது.

1 comment: