Monday, September 16, 2013

குழந்தைகளை மீட்போமா?





மண் வாசனை நுகர்ந்து
மழையில் நனைந்து
ஓடுகிற தண்ணீரில்
காகிதக் கப்பல் விட்டு
குதூகலித்த 
குழந்தைகள் கூட்டம்
எங்கே?

தொலைக்காட்சித் தொடர்களின்
கார்ட்டூன் சாகசங்களில்,
புத்தக மூட்டை சுமைகளிலே,

தொலைந்து போன
குழந்தைகளை
மீட்டெடுத்து வாருங்கள்.

இயற்கை தரும்
இன்பத்தை 
பின் எப்போது
அறிவார்கள்?

நிஜங்களை 
ஒதுக்கி விட்டு
பிம்பங்களை
ரசிக்கும் போக்கு 
நிற்கட்டுமே
நம்மோடு.... 

 

 

1 comment:

  1. கல்லாட்டம், கோலி குண்டு, கில்லி, கோகோ இப்படி எத்தனையோ ஆட்டங்களை நம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த தவறி விட்டோம். முழுக்க முழுக்க வன்முறையை தூண்டும் துப்பாக்கி கொண்டு அடுத்தவரை சுடும் கம்ப்யூட்டர் ஆட்டங்களில் இன்றைய தலைமுறை மூழ்கி கிடக்கிறது. இனியாவது விழித்துக் கொள்வோம்.

    ReplyDelete