Saturday, October 19, 2013

மனிதர்கள் குரைப்பதில்லை





காவல் நாய்கள், செல்ல நாய்கள்,
மோப்ப நாய்கள், வேட்டை நாய்கள்
வகை வகையாய் நாய்கள் இருந்தாலும்
தெரு நாய்கள்தான்
எங்கேயும் எப்போதும்.

ரொட்டியோ, எச்சிலையோ
ஏதோ ஒன்று
எப்போதும் வேண்டும்
தெரு நாய்களுக்கு.

கிடைக்காத ஏக்கத்தில்
குரைத்துக் கொண்டிருப்பது
தெரு நாய்களுக்கு பொழுது போக்கு.

தெரு நாய்களுக்கு நன்றாகவே தெரியும்
மனிதன் குரைப்பதில்லை
அதனால் அவைகள் குரைக்கின்றன.

நல்லதும் தெரியாது
கெட்டதும் புரியாது.
வாலையும் குழைக்கும்,
கோரப் பற்களாலும் கடிக்கும்.
வழியில் செல்பவர்களை
குதற மட்டும் தெரியும்
தெருநாய்களுக்கு.


(எங்கள் பகுதியில் பெருகியுள்ள தெரு நாய்களின் அட்டகாசத்தால் நாய்களைப் பற்றி மட்டுமே எழுதப்பட்டது இந்த கவிதை. ஆகவே மனிதர்கள் யாரும் பின்னூட்டம் இட வேண்டாம்.) 

No comments:

Post a Comment