Friday, October 4, 2013

ஒரு மலரின் குமுறல்


கூந்தலில் சூட்டியிருந்தால்
அழகைக் கூட்டியிருப்பேன்.

மண மாலையாய் தொடுத்திருந்தால்
மகிழ்ச்சியில் இணைந்திருப்பேன்.

ஆலயத்திற்கு அனுப்பியிருந்தால்
அருளாவது பெற்றிருப்பேன்.

இறுதி மரியாதைக்கு 
எடுத்துச்  சென்றார்கள்.
சாலையில் இரைந்து
கால்களில் மிதிபட்டு
மரியாதை இல்லாமல்
மாண்டேன் நான்
 
 

No comments:

Post a Comment