Sunday, October 6, 2013

மாத்தி யோசிச்சா, அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க

தமிழருவி மணியன் பற்றி நான் எழுதியதை "நமது மனசாட்சி" என்ற
பத்திரிக்கை வேறு பெயரில் வெளியிட்டிருந்தது பற்றி நேற்று
எழுதியிருந்தேன்.

மாற்றி யோசித்து பார்த்தால்  அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க   
என்றே  தோன்றுகிறது.

எப்படி தெரியுமா?

என் எழுத்து அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதால்தான்
அதை அவர்கள் தங்கள் பத்திரிக்கையில் பிரசுரித்தார்கள்.

அதை என் பெயரில் வெளியிடாதது கூட என் மீது உள்ள
பாசம்தான் தெரியுமா?

அது எப்படி ஒரு காங்கிரஸ் பத்திரிக்கையில் கம்யூனிஸ்ட் ஒருவர்
எழுதுவது என்று யாரும் எனக்கு பிரச்சினை கொடுக்கக்கூடாது
என்ற நல்லெண்ணம்தான்.

அது மட்டுமா,

என் பெயரில் வெளியிட்டால் லட்சக்கணக்கான வாசகர்கள் உள்ள
அந்த பத்திரிக்கை மூலம் அத்தகவல் தமிழருவி மணியனின்
கோடிக்கணக்கான ஆதரவாளர்கள் என் மீது தாக்குதல் நடத்தி
விடக் கூடாது என்ற இன்னொரு நல்லெண்ணமும் கூடத்தான்.

ஆகவே யாரும் நமது மனசாட்சி பத்திரிக்கையை திருடர்கள்
என்று சொல்லாதீர்கள்.

 அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க

பின் குறிப்பு : இதற்கு பிறகும் அவர்கள் வருத்தம் தெரிவிக்காவிட்டால்
இருக்கவே இருக்கிறது கச்சேரி

 

 

1 comment:

  1. Take Very Strong Action Comrade! Its a lesson to everybody like this Magazine

    ReplyDelete