Thursday, October 24, 2013

மின்னலாய் மறைந்த.........

அதிர வைத்தது அந்த ஓசை.
மின்னலின் துணையோடு
பலமாய் அந்த இடி.

இயற்கையின் கருணையாய்
மேகம் பொழிய
உள்ளமும் உடலும்
ஒன்றாய் வரவேற்க


மழையிலும் மகிழ்ச்சியிலும்
நனைவதற்கு 
தயாராய் நான்.


சொர்க்கத்தின் அனுபவமோ
இரண்டே  நிமிடங்கள்தான்.


மின்னலோடு வந்த மழை
மின்னலாய்  மறைந்தது
புழுக்கத்தை உருவாக்கி
உள்ளேயும் வெளியேயும்.

1 comment:

  1. மழை, தீவிரவாதிகளை போல நம் வேலூரை ஹிட் லிஸ்டில் வைத்து விட்டதோ என்னவோ ?

    ReplyDelete