Wednesday, October 23, 2013

எங்களை மட்டும் பழிப்பது ஏனோ?




அரசன் இல்லாத கோட்டை,
அதிகாரம் இல்லாத காவலர்கள்,
நீர் இல்லாத ஆறு,
மரம் இல்லாத மலை
மழை இல்லா வேலூர்
என்று
இன்னும் எத்தனை நாள்
சொல்வீர்கள்
எங்களூர் பற்றி மட்டும்?

அரசியல்வாதிகளிடம்
தன் அதிகாரத்தை
அப்படியே பறி கொடுத்த
காவல்துறை.

மனமில்லா மாநிலங்களால்,
மணல் திருடும் கொள்ளையரால்
மலடாகிப் போன
எண்ணற்ற ஆறுகள்

வனத்தை வெட்டும் கொள்ளையரால்
பசுமை இழக்கும்
மலைத் தொடர்கள்.

பொய்யுரை பேசும் தளமாய்
செங்கோட்டை.

எல்லாமே மாறிய பின்
எங்கள் வேலூரை
மட்டும் இன்னும்
ஏன் பழிக்கிறீர்கள்?  

எங்களின் சோகம்
உங்களுக்கும்தானே?

No comments:

Post a Comment