Sunday, November 10, 2013

காங்கிரஸ்காரர்களே ஜாக்கிரதை. உங்கள் கைகளை வெட்டப் போறாங்க

மேற்கு வங்கத்தின் சொர்ணாக்கா  மம்தா பானர்ஜி மீண்டும்
தனது அருட்பார்வையோடு கருணை மிகுந்த வார்த்தைகளை
காங்கிரஸ்காரர்கள் மீது வீசியிருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுவரொட்டிகளை யாராவது
காங்கிரஸ்காரர்கள் கிழித்தால் அவர்களின் கைகளை வெட்டி
எறியுங்கள் என்று வெறியோடு வார்த்தை முத்துக்களை
உதித்திருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுவரொட்டிகளை கிழிக்கும்
அளவிற்கு மேற்கு வங்க காங்கிரஸ்காரர்களுக்கு துணிவு
இருக்கிறதா என்று எனக்கு சந்தேகமாகவே உள்ளது. ஏனென்றால்
குண்டர்களை மட்டுமே தொண்டர்களாக கொண்டுள்ள ஒரே
ஒரு கட்சி சொர்ணாக்காவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

அது மட்டுமா, அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் மூலம்
மம்தா தீதி பெற்றுள்ள டாலர்களை பொறுக்கிக் கொண்டு
அவர்களுக்கு அடியாள் சேவை செய்யும் பட்டாளமாக
கஞ்சாயிஸ்டுகள் வேறு இருக்கிறார்கள்.

மம்தா பானர்ஜி ஆட்சி வருவதற்கு முன்பும் சரி, ஆட்சி
வந்த பின்பும் சரி, திரிணாமுல், கஞ்சாயிஸ்டு கும்பல்கள்தான்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களை தாக்கிக்
கொல்வது, அலுவலகங்களை எரிப்பது போன்ற அராஜக
செயல்களை செய்து வருகிறது.

ஆனாலும் காங்கிரஸ் கட்சிக்கு நன்றாக வேண்டும். 
பஸ்மாசுரன் போல மம்தாவை வளர்த்து விட்டது அவர்கள்தான்.
அவசர நிலை அறிவிக்கப்படுவதற்கு முன்பாக ஜெயபிரகாஷ்
நாராயன் அவர்களின் காரின் பேனட் மீது ஏறி ஆபாச நடனம்
ஆடியவர் மம்தா பானர்ஜி.

இன்று சட்டமன்றத்தில் விஜயகாந்தையும் கலைஞரையும்
தாக்கிப் பேசியதற்கு விஜயபாஸ்கருக்கு மந்திரி பதவியை
ஜெ பரிசாக கொடுத்தது போல ஜெயபிரகாஷ் நாராயண்
காரின் மீது ஏறி நின்று ஆபாச நடனம் ஆடியதற்கு பரிசாக
இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை பரிசாக கொடுத்த
கட்சி காங்கிரஸ் கட்சி.

மம்தாவின் வெறியாட்டத்திற்கு கொம்பு சீவி விட 
உளவுத்துறை சகுனி எம்.கே.நாராயணனை மேற்கு வங்க
ஆளுனராக அனுப்பியதும் காங்கிரஸ் கட்சி. வரத்தை 
கொடுத்த சிவன் தலையில் கை வைக்க இப்போது
பஸ்மாசுரன் தயாராகி விட்டான்.

சரி, காங்கிரஸ்காரர்களின் கையை வெட்டினால் சட்டம்
ஒழுங்கு பாதிக்கப்பட்டு மக்களின் அமைதி கெடுமே?

மக்களாவது மண்ணாங்கட்டியாவது.

முதலமைச்சர் மம்தா பானர்ஜியே சொல்லி விட்டார்.
உங்களுக்கென்ன அதைப்பற்றிய கவலை?
தூக்குங்கப்பா அரிவாளை.

3 comments:

  1. இதெல்லாம் டூ மச் !

    ReplyDelete
  2. மே.வங்க முந்தைய கம்யூனிச அரசு செய்யாத வன்முறையா.

    ReplyDelete
  3. mamta ....please paste some posters on her face.

    ReplyDelete