Sunday, December 22, 2013

இவ்வளவு பயமா இந்தியர்கள் மீது?

இந்தியா தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியின் கடைசி சில
ஓவர்களை என் மகனோடு உட்கார்ந்து பார்த்தேன். வெற்றிக்கு
அருகில் சென்ற தென் ஆப்பிரிக்க அணியின் ஏழாவது விக்கெட்
விழுந்ததும் போட்டியின் போக்கே மாறி விட்டது.

கடைசி மூன்று ஓவர்களில் அடித்து ஆடவே தென் ஆப்பிரிக்க
வீரர்கள் பயந்ததால் போட்டி ட்ராவில் முடிந்து விட்டது.

பார்வையாளர்களாக வந்திருந்த தென் ஆப்பிரிக்க மக்களின்
முக பாவம்தான் ரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்தது. 
வெற்றியை இழந்து விட்டோம் என்ற உணர்வும் தோற்று
விடுவோமோ என்ற அச்சமும் நன்றாகவே தெரிந்தது.

என் மகன் முகநூலில் போட்ட ஸ்டேட்டஸையே நானும்
வழி மொழிகிறேன்.

" அந்த பயம் எனக்கு பிடிச்சுருக்கு" 

2 comments:

  1. கிரிக்கெட்டா!? மீ எஸ்கேப்!!

    ReplyDelete
  2. எனக்கும் பிடிச்சுருக்கு.
    ஆனால் இந்தியா எப்படி வெல்லலாம் என்று சண்டைக்கு வரும் தமிழங்களும் இருக்காங்க.

    ReplyDelete