Wednesday, January 29, 2014

கலைஞருக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது?



திமுகவின் உட்கட்சி விவகாரங்கள் பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை.

ஆனால் என்னுடைய ஐயமே வேறு.

அது என்னவோ தெரியவில்லை, எப்போதெல்லாம் திமுகவில் ஸ்டாலின் தலைமைக்கு எதிராக ஏதாவது குரல் வருகிறதோ அப்போதெல்லாம் யாருடைய உயிருக்காவது அபாயம் வந்து விடுகிறது.

வைகோ வின் செல்வாக்கு அதிகரித்து எங்கே அவர் ஸ்டாலினின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றி விடுவாரோ என்ற நிலை வந்த போது அப்போது கலைஞரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத உளவு அறிக்கை சொல்லியது.

இப்போது அழகிரி  போர்க்குரல் எழுப்பிய போது “ ஸ்டாலின் மூன்று நான்கு மாதங்களில் செத்துப் போய் விடுவான்” என்று கூறுவதை எப்படி என்னால் தாங்க முடியும் என்று கேட்கிறார்.

இருபதாண்டுகளுக்கு முன்னால் நிகழ்த்தப்பட்ட திரைப்படத்தின் ரீமேக் போலவே தோன்றுகிறதே....

காட்சியமைப்புக்களையும் வசனங்களையும் மாற்றுங்கள் கலைஞரே, இப்போது இல்லாவிட்டாலும் கூட உங்கள் குடும்பப் பிரச்சினை தீர்ந்து அறிக்கை விடும் போதாவது “ கண்கள் பனித்தது, இதயம் இனித்தது” வசனத்தை கொஞ்சம் மாற்றி சொல்லி விடுங்கள்.

1 comment: